அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி |
நடிகரும், டைரக்டருமான பார்த்திபன் தற்போது கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்ற படத்தை டைரக்ட் செய்து வருகிறார். இந்தப் படத்தில் கதையே கிடையாதாம் வெறும் திரைக்கதையும், காட்சிகளும்தானாம். கதை இல்லாமலும் படம் எடுக்க முடியும் என்பதை காட்டத்தான் இந்த புதுமையான படத்தை டைரக்ட் செய்து வருகிறாராம்.
சினிமா சம்பந்தப்பட்ட இந்தப் படத்தில் பார்த்திபன் நடிக்கவில்லை. ஆனால் தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய நடிகர்கள், நடிகைகள் அனைவரையும் ஒரு காட்சியில் நடிக்க வைத்து அதிக ஹீரோக்கள் நடித்த படம் என்ற சாதனையையும் நிகழ்த்த இருக்கிறாராம். இதற்காக அனைத்து ஹீரோக்களையும் அப்ரோச் பண்ணிக்கொண்டிருக்கிறார். இதுவரை சூர்யா, ஆர்யா, விஜய்சேதுபதி, சேரன், காஜல் அகர்வால் ஆகியோர் ஓகே சொல்லி இருக்கிறார்கள். பிரபு தேவா ஒரு பாடலுக்கு ஆடிக்கொடுக்க சம்மதித்திருக்கிறார். ரஜினி, கமல் வரைக்கும் வலைவீசிக் கொண்டிருக்கிறார் பார்த்திபன்.