Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிந்து மாதவிக்கு பீதியை ஏற்படுத்திய இயக்குனர்!

30 ஜன, 2014 - 10:58 IST
எழுத்தின் அளவு:

மைனா விதார்த் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் படம் பட்டைய கெளப்பனும் பாண்டியா. இந்த படத்தில் வழக்கு எண், ஜன்னல் ஓரம் படங்களில் நடித்த மனீஷா யாதவ் நாயகியாக நடித்துள்ளார். சூரி, விதார்த்துக்கு இணையான வேடத்தில் நடித்திருக்கிறார். விஜய் நடித்த சுறா உள்பட பல படங்களை இயக்கிய எஸ்.பி.ராஜ்குமார் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

இப்படத்தின் பிரஸ்மீட்டில், விதார்த்துக்கு ஜோடியாக நடிக்க தான் பிந்து மாதவி, சுனைனா உள்பட சில நடிகைகளிடம் கால்சீட் கேட்க சென்றபோது, அவர்கள் கேட்ட சம்பளம் தலைசுற்ற வைத்து விட்டது. மார்கெட்டே இல்லாத இந்த நடிகைகள் கொஞ்சம் கூட நாக்கூசாமல் இப்படி பேசுகிறார்களே என்று கடைசியாக மனீஷாயாதவிடம் சென்றபோது, கொடுப்பதை கொடுங்கள், நான் நடிக்கிறேன் என்று முன்வந்தார் என்று சொன்ன எஸ்.பி.ராஜ்குமார், மனீஷாவை ரொம்பவே உயர்வாகவும் பேசினார்.

ஆனால், அதையடுத்து, தற்போது தமிழில் பரவலாக நடித்துக்கொண்டிருக்கும் பிந்துமாதவியின் காதுகளுக்கு இந்த சேதி சென்றபோது, அலறி விட்டாராம். தனது பெயரை அவர் குறிப்பிட்டு சொன்னதால் தான் தாறுமாறாக சம்பளத்தை உயர்த்தி விட்டதாக கருதி மீடியம் பட்ஜெட் கம்பெனிகள் விலகிச்சென்று விடுவார்களே என்று தடுமாறி விட்டாராம். அந்த நேரம் பார்த்து, அவரிடம் பட விசயமாக பேசிக்கொண்டிருந்த ஒரு படாதிபதி திடீரென்று பிந்துமாதவியின் ட்ராக்கில் வரவில்லையாம்.

அதனால் நிஜமாலுமே இந்த ஒரு வார்த்தை தனது மார்க்கெட்டை ஆட்டம் காணச்செய்தது விடும் என்று பயந்துபோன பிந்து மாதவி, தன் மீது அதிருப்தியடைந்திருக்கும் நிறுவனங்களை அணுகி, விதார்த் படத்தில் நடிக்க மறுத்ததற்கு சம்பளம் காரணமல்ல, அவர்கள் கேட்ட தேதியில் என்னிடம் கால்சீட் இல்லை. அதனால், சம்பளத்தை தூக்கலாக கேட்டால் அவர்களாக சென்று விடுவார்கள் என்பதற்காக அப்படி சொன்னேன். அதனால் அதை உண்மை என்று நம்பி என்னை ஓரங்கட்டி விடாதீர்கள் என்று விளக்கம் கொடுத்து வருகிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in