‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
தமிழில் கரண் நடித்த கனகவேல் காக்க என்ற படத்தில் அறிமுகமானவர் ஹரிப்பிரியா. கன்னட நடிகையான இவர், அதன்பிறகு அர்ஜூனுடன் வல்லக்கோட்டை என்ற படத்திலும் நடித்தார். ஆனால் இரண்டு படங்களுமே ஊத்திக்கொண்டதால் அதன்பிறகு ஹரிப்பிரியாவை கோடம்பாக்கத்தில் யாரும் கண்டு கொள்ளவில்லை. அதனால் தோல்விமுகத்துடன் மறுபடியும் கன்னட சினிமாவில் நடிக்க சென்று விட்டார்.
ஆனபோதும், கன்னட நடிகையான குத்து ரம்யாவைப்போன்று தானும் தமிழில் ஒரு இடம் பிடிக்க வேண்டும் என்று மீண்டும் முயற்சி எடுத்த ஹரிப்ரியாவுக்கு, முரண் என்ற படத்தில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த படமும் வழக்கம்போல் தோல்வியடைந்த நிலையில், தற்போது அட்டகத்தி தினேசுடன் வாராயோ வெண்ணிலாவோ மற்றும் 3ம் பார்வை என இரண்டு படங்களில் நடித்துக்கெண்டிருக்கிறார்.
இந்த நேரத்தில், மேலும், சில வயதான ஹீரோக்கள் ஹரிப்பிரியாவை தங்களுடன் நடிக்குமாறு தொடர்ந்து நச்சரித்துக்கொண்டு வருகிறார்களாம். அதோடு, அதிக சம்பளம் வாங்கித்தருவதாகவும் ஆசை வார்த்தைக் காட்டுகிறார்களாம். ஆனால், அதற்கு செவிசாய்க்காமல் இருக்கிறார் ஹரிப்பிரியா.
இதுகுறித்து அவரைக் கேட்டால், நான் செய்த முதல் தவறு நரைமுடி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்ததுதான். எனது அப்பா வயது கொண்டவர்களுடன் நடித்ததால் அதன்பிறகு இளவட்ட நடிகர்கள் என்னுடன் நடிக்க மறுத்து விட்டனர். அதனால்தான் தமிழில் இன்னமும் எனக்கு சரியான இடம் கிடைக்காமல் போராடிக்கொண்டேயிருக்கிறேன் என்று கூறும் ஹரிப்பிரியா, இனிமேல் இளவட்ட ஹீரோக்களுடன் மட்டுமே நடிப்பது என்பதில் உறுதியாக இருக்கிறாராம்.