இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
தயாரிப்பாளர் சங்கத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமையில் நிர்வாகம் இருந்தபோது கேயார் அணி அதற்கு எதிர் அணியாக இருந்து செயல்பட்டது. போட்டி பொதுக்குழு, பரஸ்பரம் ஊழல் குற்றச்சாட்டு, கோர்ட், தடை என்று கடந்த இரண்டு வருடங்களாக தயாரிப்பாளர் சங்கம் சிக்கி சின்னாபின்னமாகிக் கிடந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன் தேர்தல் நடந்தது. அதில் கேயார் அணி பெரும்பாண்மை பலத்துடன் வெற்றி பெற்று நிர்வாகத்துக்கு வந்தது. எஸ்.ஏ.சந்திரசேகர் அணி அப்படியே விலகிக் கொண்டது. அப்பாடா... என்று தயாரிப்பாளர்களும் நிம்மதிப் பெரூமூச்சு விட்டனர்.
மோதல் வெடித்தது
பெப்சியுடன் உள்ள சம்பள பிரச்னை, திருட்டு விசிடி, படம் வெளியிடுவதில் கட்டுப்பாடு, சிறு பட்ஜெட் படத் தயாரிப்பாளர்களுக்கு பாதுகாப்பு, கிடப்பில் இருக்கும் அரசு மானியங்களை பெற்றுத் தருவது, அரசு திரைப்பட விருது, போன்ற முக்கிய பிரச்னைகளுக்கு முடிவு வரும் என்று தயாரிப்பாளர்கள் காத்துக் கொண்டிருந்த நிலையில் மீண்டும் தயாரிப்பாளர் சங்கத்தில் ஈகோ பிரச்னை எழுந்து அது அடிதடியில் வரைக்கும் சென்று இனி தயாரிப்பாளர் சங்கத்திற்கு விமோசனமே இல்லையா என்கிற அளவுக்கு நிலைமை உருவாகி இருக்கிறது. கேயார் அணியிலேயே மோதல் உருவாகி இருப்பதுதான் வேதனை.
கேயார் அணியில் வெற்றி பெற்றவர்களில் பொருளாளார் ராதா கிருஷ்ணனும் ஒருவர். இவர்தான் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வென்றவர். இவருக்கும் சங்கத்தின் செயலாளராக இருக்கும் ஞானவேல்ராஜாவுக்கும் ஈகோ உருவானது. அதுவே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த செயற்குழுவில் மோதலாக வெடித்தது.
போலீசில் புகார்
செயற்குழு கூட்டத்தில் ராதாகிருஷணன் தயாரிப்பாளர்களின் மருத்துவ காப்பீடு திட்டம் தொடர்பாக ஒரு பிரச்னையை எழுப்பியதாகவும், அதற்கு ஞானவேல்ராஜா எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இது வாக்குவாதமாகி கைகலப்பில் முடிந்திருக்கிறது. உடனடியாக போலீசுக்கு தகவல் தரப்பட்டு போலீசும் குவிக்கப்பட்டது. ராதாகிருஷ்ணன் தலைமையிலான அணி வெளியேற போலீஸ் பாதுகாப்புடன் செயற்குழு நடந்தது. எந்த முடிவும் எடுக்காமல் கலைந்தது.
இப்போது தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, மீது மணிமாறன் என்ற தயாரிப்பாளர் தன்னை தாக்கியதாக ஆயிரம் விளக்கு போலீசில் புகார் அளித்துள்ளார். தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மணிமாறன் மீது புகார் அளித்துள்ளார். இருபுகார் மனுக்களையும் பெற்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உண்ணாவிரதம்
இதற்கிடையில் நேற்று 10க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகம் சென்று நடிகர் சிவகுமார் வீட்டு முன் 400 தயாரிப்பாளர்கள் உண்ணாவிரதம் இருக்க அனுமதிக்க வேண்டும் என்று மனுக் கொடுத்துள்ளனர். வள்ளுவர் கோட்டம் முன்பாவது அனுமதி கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளனர். ஞானவேல்ராஜா சிவகுமாரின் உறவினர் என்பதும் கார்த்தி, சூர்யாவை வைத்து தொடர்ந்து படம் தயாரிப்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தயாரிப்பாளர் சங்த்தில் மீண்டும் வெடித்துள்ள இந்த மோதல் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், கவலையையும் ஏற்படுத்தி உள்ளது.