'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் |
2012 ஆம் ஆண்டு ஸ்டார் பிளஸ் சேனலில் அமீர்கான் நடத்திய சத்யமே ஜெயதேவ் இந்தியாவையே அதிர வைத்தது. பெண் சிசு கொலை, குழந்தைகள் பாலியல் பலாத்காரம், போலி மருந்துகள் என அமீர்கான் எடுத்துக் கொண்ட சப்ஜெக்டுகள் அனைத்தும் அதிர்வை ஏற்படுத்தியது. நிகழ்ச்சியும் டிஆர்பி ரேட்டில் உச்சம் தொட்டது. பாராளுமன்றம் வரை அதிரவைத்த சத்யமே ஜெயதேவை நிறுத்திவிட்டு சினிமாவுக்கு போய்விட்டர் அமீர்கான்.
இப்போது தூம் 3 என்ற மெகா ஹிட்டுக்குப் பிறகு மீண்டும் சின்னத்திரைக்கு வருகிறார். அதே சேனலில் அதே சத்யமே ஜெயதேவின் 2வது சீசனை நடத்துகிறார். வருகிற மார்ச் 2ந் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த 2வது சீசன் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியும் நான்கு எபிசோட்களை கொண்டது. அதாவது மூன்று சப்ஜெக்டுகளை இந்த முறை கையில் எடுக்கிறார் அமீர்.
இதன் புரமோ கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. யூ டியூப்பில் இதனை 7 லட்சம் பேர் பார்த்துள்ளனர். ஒரு ஓட்டலின் மாடியில் நின்று அமீர்கான் கீழே சாலையை பார்கிறார். சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும்போதும் வாகனங்கள் அதனை மதிக்காமல் கடந்து செல்கின்றன. இரண்டு வாகனங்கள் சிக்னலை மதித்து நின்றதும் பின்னால் வந்த வாகனங்களும் நின்றன. "நாம் சரியாக இருந்தால் எல்லாமே சரியாக இருக்கும்" என்கிறார் அமீர்கான்.