ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
வல்லவன் படத்தில் நடித்தபோது சிம்புவுடன் நயன்தாராவுக்கு தீவிர காதல் ஏற்பட்டது. ஆனால் வேகமாக வளர்ந்த காதல் வேகமாகவே முறிந்தும் போனது. அதையடுத்து பிரபுதேவாவை இரண்டாவது முறையாக காதலித்தார் நயன்தாரா. அவரை திருமணம் செய்து கொள்வதற்காக கிறிஸ்தவ மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறினார் நயன்தாரா.
ஆனால், கடைசி நேரத்தில் அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உறவையே முறித்துக்கொண்டார்கள். அதன்பிறகு காதல் என்பதையே கெட்ட வார்த்தையாக நினைக்கும் நயன்தாரா, இனி என் வாழ்க்கையில் காதல், கல்யாணம் என்பது நடக்காது. எல்லாமே நடந்து முடிந்து விட்டது என்று விரக்தியில் பேசி வருகிறார்.
இந்த நேரத்தில், அவர் ஆர்யாவுடன் நடித்த ராஜா ராணி படத்தில், அவர்களுக்கு திருமணம் நடப்பது போன்ற காட்சி இடம்பெற்றது. அதை வைத்துதான் பெரிய அளவில் பப்ளிசிட்டியே செய்தனர். அதேபோல் இப்போது சிம்புவுடன் நயன்தாரா இணைந்துள்ள பெயரிடப்படாத படத்திலும் அவர்களுக்கு இந்து முறைப்படி திருமணம் நடப்பதுபோன்று ஒரு காட்சி உள்ளதாம். ஒரு பிரபல கோயிலில் அந்த காட்சியை படமாக்க திட்டமிட்டு வருகிறார்கள்.
இதையடுத்து, தனக்கு நெருக்கமான நண்பர்களிடம், திருமணத்தைப்பற்றி எப்படியெல்லாமோ கனவு கண்டு வைத்திருந்தேன். எதுவுமே நடக்கவில்லை. ஆனால் சினிமாவில் படத்துக்குப்படம் எனக்கு திருமணம் நடப்பது போன்று காட்சி வைக்கிறார்கள். ஆக. நிஜத்தில் எனக்கு பிரார்த்தம் இல்லாத விசயங்களெல்லாம் சினிமாவில் நடந்து கொண்டு வருகிறது. இப்படியாவது திருமணம் நடக்கிறதே என்று மனதை தேற்றிக்கொள்ள வேணடியதான் என்று சொல்லி விரக்தியாக சிரிக்கிறாராம் நயன்தாரா.