நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? |
ஒளிப்பதிவாளர் எஸ்.டி.விஜய்மில்டன் டைரக்ட் செய்துள்ள கோலிசோடா கடந்த வெள்ளிக்கிழமை ரிலீசானது. பசங்க படத்தில் நடித்த பசங்களும் சாந்தினி, சீதா என்ற இரண்டு சிறுமிகளும் நடித்திருந்தனர். ஒரு கோடி ரூபாய்க்குள் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தை பார்த்த லிங்குசாமி தனது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் சார்பில் அதை வாங்கி வெளியிட்டார். அனைத்து உரிமைகளையும் இரண்டு கோடிக்கு வாங்கியதாக கூறுகிறார்கள்.
படத்தை வாங்கிய லிங்குசாமி பெரிய அளவில் விளம்பரம் செய்தார். 180 தியேட்டர்களில் படம் ரிலீசானது. தற்போது மீடியாக்கள் சைடிலிருந்தும், மவுத் டாக்கிலும் படத்திற்கு பாசிட்டிவான ரிசல்ட் கிடைத்து வருகிறது. இதையோட்டி ஜனவரி 26 முதல் மேலும் 25 தியேட்டர்களில் புதிதாக திரையிட்டிருக்கிறார்கள். இதுதவிர 45 தியேட்டர்களில் காட்சிகளை அதிகப்படுத்தி உள்ளனர். வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று நாட்களிலும் ஒரு கோடிக்குமேல் வசூலித்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் உற்சாத்தில் இருக்கிறார்கள் கோலிசோடா டீமும், வாங்கி வெளியிட்ட திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமும்.