மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
தனுஷ்-நயன்தாரா இணைந்து நடித்த படம் யாரடி நீ மோகினி. இந்த படத்தில் அவர்களின் கெமிஸ்ட்ரி ரொம்ப நன்றாக ஒர்க் அவுட்டாகியிருந்தது. அதன்பிறகு அவர்கள் இணைவதற்கான சந்தர்ப்பங்கள் அமையவில்லை. இருப்பினும் நயன்தாராவுடன் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்து வந்த தனுஷ், தான் தயாரித்த எதிர்நீச்சல் படத்தில் ஒரு பாடல் காட்சியில் மீண்டும் நயனுடன் இணைந்து நடனமாடினார். அந்த படமும் வெற்றி பெற்றதால், அந்த செண்டிமென்டை கருத்தில் கொண்டு மீண்டும் நயன்தாராவுடன் டூயட் பாட தயாராகியிருக்கிறார் தனுஷ்.
அதனால், வேலையில்லா பட்டதாரி, அனேகன், வேங்கைசாமி படங்களுக்குப்பிறகு தான் நடிக்கும் ஒரு படத்தில் நயன்தாராவை ஒப்பந்தம் செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளாராம். அதையடுத்து நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது, தமிழ், தெலுங்கில் தன் கைவசம் இருக்கும் படங்களை பட்டியலிட்டு, இந்த படங்களை முடித்த பிறகுதான் கால்சீட் தருவேன் என்று சொல்லி, அடுத்த ஆண்டில் ஒரு 20 நாட்களை எண்ணிக்கொடுத்தாராம். அதோடு, 2 கோடி சம்பளம் வேண்டும் என்றும் கேட்டாராம்.
அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த படாதிபதி, இது சம்பந்தமாக தனுஷிடம் முறையிட்டாராம். ஆனால், அந்த கதைக்கு நயன்தாராதான் பொருத்தமாக இருப்பார் என்று சொன்ன தனுஷ், அவர் கால்சீட் தருவதற்கும், நான், கைவசமுள்ள இரண்டு தமிழ் படம், ஒரு இந்தி படத்தை முடித்து வருவதற்கும் சரியாகத்தான் இருக்கும். அதனால் அவர் கேட்ட தொகையை கொடுத்து புக் பண்ணுங்கள் என்று கூறிவிட்டாராம்.
ஆக, மீண்டும் தனுஷ்-நயன்தாரா இணைவதற்கான சூழல் உருவாகியிருக்கிறது.