ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழில் நிமிர்ந்து நில் படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடித்து வருபவர் கன்னட நடிகை ராகிணி. கன்னடத்தில் ராகிணி ஐ.பி.எஸ் என்ற பெயரில் உருவாகும் ஒரு படத்தில் டெரர் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இதற்காக ஜிம்முக்கு போய் உடம்பை பிட்டாக்கி நடித்துள்ளார். ஆக்ஷன் காட்சியில் பொளந்து கட்டியுள்ளதை தெலுங்கு மீடியாக்கள் பெருமையாக சொல்லிக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் ராகிணியை மூன்று பெரிய அரசியல் கட்சிகள் தங்கள் கட்சியில் சேருமாரும் அப்படிச் சேர்ந்தால் வரும் பாராளுமன்ற தேர்தலில் விரும்பிய தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிப்பதாகவும் கூறியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி ராகிணி தனது பேஸ்புக்கில் கூறியிருப்பதாவது:
எனக்கு மூன்று பெரிய கட்சிகளில் இருந்து அழைப்பு வந்தது உண்மைதான். அரசியல் கட்சியில் சேருவது பற்றியும், தேர்தலில் போட்டியிடுவது பற்றியும் நான் இன்னும் முடிவெடுக்கவில்லை. நான் சில அரசியல் கட்சிகள் நடத்திய பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறேன். அதை வைத்து எனக்கு அரசியல் ஆர்வம் இருப்பதாக அவர்கள் கருதி இருக்கலாம். கன்னடத்தில் ராகிணி ஐ.பி.எஸ்சும், தமிழில் நிமிர்ந்து நில்லும் எனக்கு நல்ல பெயரை பெற்றுத் தரும். அதனால் இப்போதைக்கு சினிமா மீதுதான் கவனம் செலுத்துகிறேன். என்று கூறியிருக்கிறார்.