‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
நீண்ட இடைவெளிக்குப் பிறகு கவுண்டமணி நடித்து வரும் படம் 49ஓ. இதில் கவுண்டமணி விவசாயியாக நடிக்கிறார். இதன் ஷூட்டிங் கடந்த சில வாரங்களாக தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் நடந்து வருகிறது. கவுண்டர் நடிக்கும் செய்தி கேட்டு தஞ்சை பகுதி மக்கள் ஷூட்டிங் நடக்கும் இடத்துக்கு படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். "இன்னிக்கு கவுண்டருக்கு எந்த ஊருல ஷூட்டிங்" என்பதுதான் தஞ்சை ஜில்லா முழுக்க டீக்கடை பெஞ்சு பேச்சாக இருக்கிறது.
தஞ்சை அருகே உள்ள ஒரத்தநாட்டில் ஒரு வயல்வெளியில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது அந்த பக்கமாக செல்லும் பேருந்துகள் அங்கு நிறுத்தப்பட்டு பயணிகள் ஓடிச் சென்று அவருடன் கூட்டமாக நின்ற படம் எடுத்துக் கொள்கிறார்கள். ஒரத்தநாட்டில் இருந்து தஞ்சைக்கோ, தஞ்சையிலிருந்து ஒரத்தநாட்டிற்கோக பஸ் ஏறும் பயணிகளில் சிலராவது "கண்டக்டரே கவுண்டர் ஷூட்டிங் ஸ்பாட்டுல பஸ் நிக்குமா" என்று கேட்டுக்கொண்டே ஏறுகிறார்கள்.
கவுண்டரை காண வரும் பொதுமக்கள் வயல்வெளிகளை மிதித்து நாசப்படுத்துவதால் படப்பிடிப்பு வயல் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் கவுண்டர் ஒரு ஐடியா செய்தார். படப்பிடிப்புக்கு யாரும் வரவேண்டாம் நானே ரோட்டுக்கு வருகிறேன் என்று சொல்லி படப்பிடிப்பின் இடைவெளியில் ரோட்டுக்கு வரப்பு வழியாக நடந்தே சென்று அவர்களுடன் படம் எடுத்துக் கொள்கிறார். இதற்காக மக்கள் ரோட்டில் காத்துக் கிடக்கிறார்கள். "ஏம்பா நான் என்ன காந்தியா காமராசரா என்கூட போட்டா எடுக்குறதுக்கு இப்படி காத்துக்கிடக்கீங்க. பேசாம புள்ளைகுட்டிங்கள படிக்க வைங்கப்பா" என்று கமெண்ட் அடித்தபடியே போட்டாவுக்கு நிற்கிறார். "வயசானாலும் கவுண்டரு குசும்பு மட்டும் குறையலே"ன்னு ஜனங்களும் பேசிக்கிட்டே போறாங்க.