தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாள சினிமாவையே கலக்கிக் கொண்டிருக்கிறது த்ரிஷ்யம். இதுவரை மலையாள சினிமா கண்டிராத கலெக்ஷனை அள்ளிக் கொண்டிருக்கிறது. சுமார் நாலறை கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படம் 25 கோடி தாண்டி வசூலித்துக் கொண்டிருக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு மிகப்பெரிய வெற்றியை ருசித்தததால் மகிழ்ச்சியில் இருக்கிறார் மோகன்லால். அவருக்கு ஜோடியாக நடித்த மீனாவுக்கு திடீர் மவுசு ஏற்பட்டிருக்கிறது. அப்படி என்னதான் இருக்கிறது த்ரிஷியத்தில். திரைக்கதை... பக்கா திரைக்கதைதான் படத்தை பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டுக்கு விரட்டிக் கொண்டிருக்கிறது. செண்டிமெண்ட் கலந்த பக்கா த்ரில்லர் கதை.
மோகன்லால் அதிகம் படிக்காத ஒரு நடுத்தர குடும்பத் தலைவர். அவரது மனைவி மீனா.
இரண்டு பெண் குழந்தைகள் ஒரு மகள் அஞ்சு, பிளஸ்-2 படிக்கிறாள். இன்னொரு மகள் அனு, 6ம் வகுப்பு படிக்கிறாள். மோகன்லால் சரியான சினிமா பைத்தியம். ஒரு படம் விடாமல் பார்த்துவிடுவார், தன் குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளைகூட தான் பார்த்த படத்தில் வரும் காட்சிகளைக் கொண்டே தீர்த்து விடுவார். அமைதியான சந்தோஷமான இந்தக் குடும்பத்தில் புயல் வீச ஆரம்பிக்கிறது.
மோகன்லாலின் மூத்த மகள் அஞ்சுவை அவள் குளிக்கும்போது அதை வீடியோவில் படமெடுக்கிறான் பெண் போலீஸ் கமிஷனரின் மகன். அதை வைத்துக் கொண்டே மோகன்லால் இல்லாத நேரத்தில் அவரது வீட்டுக்குச் சென்னு அஞ்சுவுக்கும், மீனாவுக்கும் செக்ஸ் டார்ச்சர் கொடுக்கிறான். ஒரு நாள் அவர்கள் இருவரும் சேர்ந்து அவனை விரட்டும்போது அவன் தவறி விழுந்து இறந்து விடுகிறான். வீடு திரும்பும் மோகன்லால் நிலைமைய உணர்ந்து தன் குடும்பத்தின் மீது கொலை பழி விழும் என்பதால் கொல்லப்பட்டவனை தன் வீட்டின் பின்புறம் புதைத்து விட்டு கொலை நடந்த அன்று குடும்பத்துடன் வெளியூருக்கு சுற்றுலா சென்று விட்டதாக நாடகமாடி விடுகிறார். இது அவர் பார்த்த சினிமாவின் காட்சியின் அடிப்படையில் அவர் செய்தது.
இந்த கொலையை மோகன்லாலை பிடிக்காத பக்கத்து வீட்டுக்காரன் எப்படியோ மோப்பம் பிடித்து போலீசில் போட்டுக் கொடுத்து விடுகிறான். போலீஸ் அனைவரையும் கைது செய்கிறது. இளைய மகள் அனு அவன் புதைக்கப்பட்ட இடத்தை காட்டுகிறாள். போலீஸ் தோண்டிப் பார்த்தால் அங்கு ஒரு எருமை கன்றுக்குட்டிதான் புதைக்கப்பட்டிருக்கிறது. குற்றம் நிரூபிக்கப்படாமல் மோகன்லால் குடும்பம் விடுவிக்கப்படுகிறது.
கொலை செய்து புதைக்கப்பட்ட பிணம் எங்கே? மோகன்லால் எப்படி தன் குடும்பத்தை காப்பாற்றினார் என்பதுதான் படத்தோட சஸ்பென்ஸ். அப்படி அவர் காப்பாற்றியதும் இன்னொரு சினிமாவின் காட்சிகளை வைத்துதான்.
எப்படி இருக்கு கதை?. பார்க்கணும்போல ஆசையா இருக்குமே... வெயிட் பண்ணுங்க சீக்கிரமே யாராவது தமிழ்ல ரீமேக் பண்ணுவாங்க. தெலுங்கில் வெங்கடேசும், தமிழில் விக்ரமும் நடிப்பார்கள் என்று கூறப்படுகிறது. இந்தி உள்பட இந்திய மொழிகள் அனைத்திலும் படத்தை ரீமேக் செய்ய கடும்போட்டி இருக்கிறது. இதை உணர்ந்த தயாரிப்பாளர் ரீமேக் உரிமையை கோடிவரை உயர்த்தி விட்டதாகவும் கூறப்படுகிறது.