அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் டைரக்ட் செய்து வரும் படம் யான். ஜீவா, ராதா மகள் துளசி, பிரகாஷ்ராஜ் நடித்து வருகிறார்கள். இதன் பெரும்பாலான ஷூட்டிங் முடிந்துவிட்டது. மொராக்கோ நாட்டில் 15 நாள் ஷூட்டிங் நடத்த வேண்டியது இருக்கிறது. ஆனால் அந்த நாட்டிலிருந்து இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. தயாரிப்பாளர் எல்ரெட் குமார் அதற்கான தீவிர முயற்சியில் இருக்கிறார். கடந்த 3 மாதங்களுக்கு மேல் யான் டீம் மொராக்கோ நாட்டு அனுமதிக்காக காத்துக் கொண்டிருக்கிறது.
மொராக்கோவில் உள்ள ஒரு சர்வதேச கடத்தல் கும்பலிடம் மாட்டிக் கொள்ளும் ஜீவா அங்கிருந்து எப்படி தப்பிக்கிறார் என்கிற ஆக்ஷன் பிளாக்தான் அங்கு ஷூட் பண்ண வேண்டியிருக்கிறது. மொராக்கோ, தங்கள் நாட்டை பற்றியும், தங்கள் மதத்தை பற்றியும் இந்த கதை தவறாக சித்தரித்து விடுமோ என்று அனுமதி தர தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. படம் தொடர்ந்து தாமதமாகி வருவதால் மொராக்கோ தவிர வேறு நாட்டில் ஷூட்டிங் நடத்திவிடலாமா என்றும் யோசித்து வருகிறார்கள்.