ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இந்தியில் வித்யாபாலன் நடித்த படம் கஹானி. காணாமல் போன கணவரை கர்ப்பிணி பெண் தேடிச்செல்லும் இந்த படம் இந்திய அளவில் ரசிகர்களால் வரவேற்கப்பட்டது. அதனால் இப்போது அதையே தமிழ், தெலுங்கில் அனாமிகா என்ற பெயரில் நயன்தாராவை வைத்து படமாக்கியுள்ளனர். இதுவரை சாதாரணமான கேரக்டர்களிலேயே நடித்து வந்த நயன்தாரா முதன்முறையாக ஒரு டைட்டீல் வேடத்தில் நடித்திருக்கிறார்.
படம் ரிலீசுக்கு தயாராகி விட்டதால், ஏதேனும் வித்தியாசமான பப்ளிசிட்டி செய்து பரபரப்பு கூட்ட நினைத்தவர்கள், அனாமிகாவின் கணவரை காணவில்லை என்று சென்னை நகரெங்கும் போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
இதற்கு முன்பு, ஆர்யாவுடன் நயன்தாரா இணைந்து நடித்த ராஜா ராணி படத்தின் ரிலீசுக்கு முன்பும் ஆர்யா-நயன்தாராவுக்கு நிஜமாலுமே திருமணம் நடந்தது போன்று புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டு ஒரு பரபரப்பை ஏற்படுத்தினர். அதேபோல் இப்போதும் இந்த பரபரப்பை புகைய விட்டுள்ளனர்.
ஆனால் இதற்கு இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கணவரை காணவில்லை என்று ஒட்டப்பட்டிருக்கும் இந்த போஸ்டர் மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும். அதனால் இதுபோன்ற விளம்பரங்களை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.