ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஒரு படம் ரிலீசாகும் அன்று முதல் நாள் முதல் ஷோ பார்ப்பவர்கள் படத்தின் இடைவேளையின் போதே படத்தை பற்றி தங்கள் கருத்தை நண்பர்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்பி விடுகிறார்கள். சமீபகாலமாக இது அதிரித்துள்ளது. சிக்கிக்கு சிக்கிக்கிச்சு என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இதுபற்றி நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் வருத்தத்துடன் குறிப்பிட்டார்.
அவர் பேசியதாவது: கோடி கணக்கில் பணம் செலவு செய்து ஒரு தயாரிப்பாளர் ஒரு படத்தை தியேட்டருக்கு கொண்டு வருகிறார். அதை ஒரு மணிநேரம் மட்டும் பார்த்துவிட்டு "மாப்பிளே படத்துக்கு வந்துடாதே". "120 ரூபாய் வேஸ்ட் மச்சான்" என்றெல்லாம் எஸ்.எம்.எஸ் செய்து நண்பர்களை தியேட்டர் பக்கமே வரவிடாமல் செய்து விடுகிறார்கள். இது அந்த புரட்யூசரின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்குகிறது.
ஒரு படம் ஒருவருக்கு பிடிக்காமல் போகலாம். இன்னொருவருக்கு பிடிக்கலாம். உங்களுக்கு பிடிக்காத படம் உங்கள் நண்பருக்கு பிடிக்கலாம். அப்படி இருக்கும்போது அவர்களை ஏன் தடுக்கிறீர்கள். அவர்களும் பார்த்து விட்டு நல்லா இருக்கிறது நன்றாக இல்லை என்று முடிவு செய்யட்டுமே. அரவிந்த் கெஜ்ரிவால் பற்றி எனக்கு ஒரு கருத்து இருக்கும். அதே கருத்துதான் எல்லோருக்கும் இருக்குமா? இதனை புரிந்து கொள்ள வேண்டும்" என்றார்.