ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
விஜய் நடித்த சுறா படத்தை டைரக்ட் செய்த எஸ்.பி.ராஜ்குமார் இப்போது பட்டைய கிளப்பணும் பாண்டியா என்ற பெயரில் ஒரு படத்தை டைரக்ட் செய்து வருகிறார். மலேசிய தொழில் அதிபர் எம்.ஆணிமுத்து என்பவர் தயாரிக்கிறார். விதார்த், மனீஷா, சூரி நடிக்கிறார்கள். இந்த படத்தில் மனீஷா குறைந்த சம்பளத்தில் நடித்துக் கொடுத்திருக்கிறார். இதுபற்றி அதன் இயக்குனர் எஸ்.பி.ராஜ்குமார் கூறியதாவது:
சிறு பட்ஜெட் படமாக இதை ஆரம்பிச்சோம். அப்புறம் பெரிய பட்ஜெட் படமாயிடுச்சு. ரெண்டு வருஷம் இந்த கதைக்கு தயாரிப்பாளர் கிடைக்காமல் அலைஞ்சிருக்கேன். கடைசியில ஆணிமுத்து முன்வந்தார். விதார்த்துதான் ஹீரோ, சூரிதான் காமெடியன்னு கதை எழுதினப்பவே முடிவு பண்ணிட்டேன். ஹீரோயினா நடிக்க பிந்து மாதவி, சுனேனா உள்பட பல நடிகைகளை கேட்டேன். அவர்கள் கேட்ட சம்பளம் படத்தின் பட்ஜெட்டில் பாதியாக இருந்தது. டைரக்ஷன் வேலையை விட்டுவிட்டு ஊருக்கு போயிடலாமான்னு இருந்திச்சு. கடைசியாத்தான் நண்பர் ஒருவர் மூலமா மனீஷாவை அணுகினேன்.
அவருக்கு நான் மனசுக்குள்ள ஒரு சம்பளம் பிக்ஸ் பண்ணி வச்சிருந்தேன். அதைவிட குறைந்த சம்பளத்தில் அவர் நடிச்சுக் கொடுத்தார். நல்ல கதையா இருந்தா எவ்ளோ வேணாலும் சம்பளம் குறைச்சுக்குவார். அவரோட நல்ல மனசுக்கு இந்த வருஷம் நிறைய படம் கிடைக்கும். என்ன ஷூட்டிங்குக்கு கொஞ்ம் லேட்டா வருவாரு. கொஞ்சம் கோபமா பேசினாலும் அழுதிடுவார். அதை மட்டும் மாத்திக்கிட்டா பெரிய நடிகையா வருவார் என்றார்.