தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சரவணன் மீனாட்சி தொடரின் முதல் சீசனில் முக்கிய கேரக்டரில் நடித்தவர் ரம்யா. இரண்டாவது சீசனில் அவர் இல்லை. அவருக்கு பதிலாக வேறொருவர் நடிக்கிறார். ரம்யா சரவணன் மீனாட்சியிலிருந்து விலகியது ஏன் என்பது பற்றி விளக்கம் அளித்துள்ளார் அவர் கூறியிருப்பதாவது: சரவணன் மீனாட்சியின் முதல் சீசனில் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. அதற்காகவாவது சீசன் 2வில் நடிக்க முடிவு செய்திருந்தேன். ஆனா என் வயசுள்ள நடிகருக்கு அம்மாவாக நடிக்க சொன்னாங்க. அது எப்படி முடியும் அதான் நானே விலகிட்டேன்.
பாலுகேந்திரா சாரோட தலைமுறைகள்ல நடிச்ச பிறகு நிறைய சினிமா வாய்ப்புகள் வருது. நல்ல கதைகளையும், கேரக்டர்களையும் செலக்ட் பண்ணி நடிக்கிறேன். தலைமுறைகள் படத்தில் பாலுமகேந்திரா சாரோட மருமகளாக நடிச்சது யாருக்கும் கிடைக்காத பாக்கியம். அவருகிட்டேருந்து சினிமா பற்றியும், நடிப்பு பற்றியும் நிறைய கத்துக்கிட்டேன். காமெடி கேரக்டர்கள், வில்லி கேரக்டர்கள்ல நடிக்க ஆர்வமா இருக்கேன் என்கிறார் ரம்யா.