ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சூப்பர் ஸ்டார் ரஜினி ஏழுமலையானின் தீவிர பக்தர். ஒரு படம் ரிலீசுக்கு முன்பும், அந்தப் படம் வெற்றி பெற்ற பிறகும் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். சமீபத்தில் அவர் உடல்நலம் குன்றியபோது அவரது மனைவி லதா திருப்பதி கோவிலுக்கு முடிகாணிக்கை செலுத்தினார். தற்போது இன்னும் ஒரு சில மாதங்களில் கோச்சடையான் ரிலீசாக உள்ள நிலையில் ரஜினி நேற்று (ஜனவரி 23) இரவு காரில் திருப்பதி சென்றார். அவருடன் மகள் ஐஸ்வர்யாவும் உடன் சென்றார்.
கோவிலுக்கு வந்த ரஜினி வி.ஐ.பி தரிசனத்தில் நின்று சாமி கும்பிட்டார். பின்னர் வெளியில் வந்து தங்க கொடிமரத்தை தொட்டு வணங்கினார். கோயிலுக்குள் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் அவருக்கு வேத ஆசீர்வாதம் செய்யப்பட்டது. கோவில் பிரசாதங்களையும் பக்தியுடன் பெற்றுக் கொண்டார்.
பின்னர் வெளியில் வந்த ரஜினியை நிருபர்கள் சூழ்ந்து கொண்டனர். சுற்றி நின்று வருகிற பாராளுமன்ற தேர்தலில் மோடியை ஆதரிப்பீர்களா? தமிழ் நாட்டில் யாருக்கு ஆதரவு? கோச்சடையான் தாமதம் ஏன்? அடுத்து படம் என்ன? என பல கேள்விகளை கேட்டனர். எல்லாவற்றையும் புன்னகையுடன் கேட்டுக் கொண்ட ரஜினி, "சுவாமி தரிசனம் நல்ல முறையில் நடந்தது. நாட்டில் உள்ள அனைவரும் நலத்துடன் வாழ அருளும்படி சுவாமியிடம் வேண்டிக் கொண்டேன்" என்று மட்டும் சொல்லிவிட்டு மகளுடன் காரில் ஏறி பறந்தார்.