ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
1974ம் ஆண்டு நாடகங்களில் நடித்து வந்த எஸ்.வி.சேகர், மணல் கயிறு, பூவே பூச்சூடவா படங்களுககு பிறகு சினிமாவில் முன்னணி நடிகரானவர். பல படங்களில் நாயகனாக நடித்தவர், இப்போதுவரை கேரக்டர் வேடங்களிலும் நடித்துக்கொண்டு வருபவர், அரசியலிலும் தன்னை இணைத்துக்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், அவரது மகன் அஸ்வின் சேகர் நடித்துள்ள நினைவில் நின்றவள் என்ற படம் வருகிற 30-ந்தேதி திரைக்கு வருகிறது. அதனால் நேற்று அப்படத்தின் பத்திரிகையாளர் காட்சி திரையிடப்பட்டது. முன்னதாக, மேடையில் தோன்றிய எஸ்.வி.சேகர், நினைவில் நின்றவள் படத்தை இயக்கிய அகஸ்திய பாரதி இறந்து விட்டதால், அவரது மகள்களை மேடைக்கு அழைத்து 2 லட்சம் ரூபாயை படிப்பு செலவுக்காக கொடுத்தார். மேலும், டிரஸ்ட் சார்பில் 40 குழந்தைகளை தாங்கள் படிக்க வைத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசுகையில், என்னை இத்தனை காலமும் பத்திரிகைகள் ஆதரித்து வருகின்றன. அதேபோல், எனது மகன் அஸ்வினையும் ஆதரிக்க வேண்டும். மேலும், பெரிய படங்களுக்கு பெரிய அளவில் ஆதரவு கொடுக்கும் பத்திரிகைகள் சிறிய படங்களுக்கு அந்த அளவுக்கு ஆதரவு கொடுப்பதில்லை. ஆனால், அப்படி செய்யாமல் சின்னதோ, பெரியதோ எதுவாக இருந்தாலும் நல்ல படமாக இருக்கும் பட்சத்தில் சிறிய படங்களுக்கும் ஆதரவு கொடுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.