விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் |
நடிகர் சிவாஜிகணேசனுக்கு கடந்த 2006-ம் ஆண்டு சென்னையிலுள்ள மெரினா கடற்கரை சாலையில் சிலை வைக்கப்பட்டது. ஆனால், 7 ஆண்டுகளுக்குப்பிறகு இப்போது, அந்த சிலையினால் போக்குவரததுக்கு இடையூறாக இருப்பதாக, சீனிவாசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தார். அதையடுத்து போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால் சிவாஜி சிலையை அங்கிருந்து வேறு இடத்துக்கு மாற்றலாம் என்று போக்குவரத்து துறை சார்பில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் அதை எதிர்த்து, சிவாஜி சமூக நலப்பேரவை சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. அதைத் தொடர்ந்து சிவாஜி கணேசனின் ரசிகர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், சிவாஜி சிலையை மெரினா கடற்கரையில் இருந்து அகற்றி வேறு இடத்தில் வைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இது சிவாஜி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாகி உளளது.
இந்நிலையில், நேற்று மாலை சிவாஜியின் மகன்களான ராம்குமார், பிரபு ஆகியோர் விடுத்துள்ள செய்தியில், மெரினா கடற்கரையில் அமைந்துள்ள சிவாஜி சிலையை அகற்றுவது சம்பந்தமான தீர்ப்பை உயர்நீதிமன்றம் அறிவித்தபோதிலும், இறுதி முடிவை அரசிடமே விட்டுள்ளது. அதனால் இது சம்பந்தமாக தமிழக அரசு நல்லதொரு முடிவை எடுக்கும் என்று நம்புவோம். மேலும், நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மதிப்பளிக்கும் வகையில், சிவாஜி ரசிகர்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.