விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் |
பிரபு நடித்த பொன்மனம் படத்தில் இயக்குனரானவர் எஸ்.பி.ராஜ்குமார். அதையடுத்து பிரபுதேவா நடித்த என் உயிர் நீதானே மற்றும் என் புருஷன் குழந்தை மாதிரி, கார்மேகம், அழகர் மலை ஆகிய படங்களை இயக்கிய அவர், பின்னர் விஜய் நடித்த சுறா படத்தை இயக்கினார். அடுத்து ஒரு புதுமுக நடிகரை வைத்து பாக்கனும் போல இருக்கு என்ற படத்தை இயக்கினார் ராஜ்குமார். ஆனால், அந்த படம் பைனான்ஸ் பிரச்னையில் சிக்கிக்கொண்டது.
அந்த நேரத்தில் விதார்த்தை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்று ஒரு புதிய பட நிறுவனம் வந்ததால், பாக்கனும் போல இருக்கு படத்தை வெளிக்கொண்டு வரும் முயற்சியை கிடப்பில் போட்டுவிட்டு, விதார்த் நடிக்கும் பட வேலைகளை தொடங்கினார். அப்படத்துக்கு பட்டைய கிளப்பனும் பாண்டியா என்று பெயர் வைத்து, முழுநீள காமெடி படமாக தற்போது இயக்கி முடித்து விட்டார்.
விதார்த்துக்கு ஜோடியாக வழக்கு எண், ஜன்னல் ஓரம் நடித்த மனீஷா யாதவ் நடித்துள்ள இப்படத்தில் சூரியும் இன்னொரு முக்கியமான வேடத்தில் நடித்துள்ளாராம். இதன் படப்பிடிப்பு நடந்தபோது பல சீன்களை சூரிக்காக விட்டுக்கொடுத்தாராம் விதார்த்.
அதுபற்றி விதார்த் கூறுகையில், பட்டைய கிளப்பனும் பாண்டியா பக்கா காமெடி படம். அதனால் கதாநாயகனாக நான் நடித்தாலும், காமெடியனான சூரிக்கு படத்தில் நிறைய வேலை உள்ளது. அதோடு, இப்போது அவருக்கு மார்க்கெட்டும் நன்றாக உள்ளது. அதனால், சில முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகளை அவருக்கு கொடுத்து விட்டு நானே அந்த காட்சிகளில் இருந்து வெளியேறி விட்டேன். அப்படி விட்டுக்கொடுத்ததால், சூரி நடித்த காமெடி காட்சிகள் நன்றாக வந்துள்ளது. படத்துக்கும் அது பெரிய பலமாகியிருககிறது என்று சொல்லும் விதார்த், என்னைப்பொறுத்தவரை, ஒரு காமெடியனுக்கு தனது காட்சிகளை விட்டுக்கொடுக்கிறோமே என்ற ஈகோவெல்லாம் கிடையாது. நான் நடிக்கிற படம் நன்றாக வர வேண்டும். வெற்றி பெற வேண்டும். இது மட்டும்தான் எனது நோக்கமாக இருக்கும். அதற்காக எதையும் நான் விட்டுக்கொடுக்கத் தயாராக இருக்கிறேன் என்கிறார்.