டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஏ.எல்.விஜய் இயக்கத்தில், விஜய் நடித்த படம் தலைவா. இந்த படத்தில் அமலாபால் முக்கிய நாயகியாக நடிக்க, இரண்டாவது நாயகியாக மும்பை நடிகை ராகினி நந்தவானி நடித்திருந்தார். விஜய்யை ஒருதலையாக காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்த ராகினி, ஒரு காட்சியில் அவரது உயிரையே காப்பாற்றுவார். அதனால் தியேட்டர்களில் விஜய் ரசிகர்களிடமிருந்து பெரிய அளவில் கைதட்டல் பெற்றார்.
அதோடு, நல்ல க்யூட்டான நடிகையாக இருந்த ராகினியை, அடுத்த காஜல்அகர்வால் என்றும் சிலர் கருத்து தெரிவித்தனர். ஆனபோதும், அதன்பிறகு கோடம்பாக்கத்திலுள்ள சில டைரக்டர்களை சந்தித்து சான்ஸ் கேட்ட ராகினிக்கு உடனடியாக எந்த வாய்ப்பும் கிட்டவில்லை. அதனால் கைவசமிருந்த இந்தி படங்களில் நடிப்பதற்காக மும்பைக்கு திரும்பிச்சென்று விட்டார்.
இந்த நிலையில், தற்போது மலையாளத்தில் மோகன்லால் நடிக்கும் பெருச்சாழி என்ற படத்தில் நாயகியாக நடிக்கிறாராம் ராகினி நந்த்வானி. பிரசன்னா நடித்த அச்சமுண்டு அச்சமுண்டு படத்தை இயக்கிய அருண் வைத்யநாதன் இயக்கும் இந்த படத்தில், ராகினிக்கு அவரது வயதை மீறிய கனமான கதாபாத்திரமாம். அதனால், இப்படம் மூலம் மலையாளத்தில் ஆழக்காலூன்றி விடலாம் என்ற முடிவில் இருக்கும் அவர், மறுபடியும் கோடம்பாக்கத்தில் என்ட்ரி கொடுக்கப்போகிறாராம்.
குறிப்பாக, தமிழில் முதல் படமே விஜய்யுடன் என்பதால், அவருடன் மற்றும் அவருக்கு இணையான முன்னணி கதாநாயகர்களுடன் தான் பிரவேசிக்க வேண்டும் என்று ஆசைப்படும் ராகினி, அதி விரைவில் கோலிவுட்டுக்கு அதிரடி விசிட் அடிக்கப்போகிறாராம்.