பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பும் முடிந்ததும் திருப்பதி சென்று சாமி தரிசனம் பெற்று வரும் அஜீத், வீரம் படப்பிடிப்பு முடிந்ததும் அதை செயல்படுத்தினார். அதேபோல், ஒரு படத்தை முடித்ததும் ஜாலி டூர் சென்று வரும் அஜீத், இந்த முறையும் குடும்பத்துடன் ஆஸ்திரேலியா சென்று திரும்பி விட்டார்.
வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்பியதில் இருந்து அடுத்த படத்தில் நடிப்பதற்காக தன்னை தயார்படுத்திக்கொண்டிருக்கிறார் அஜீத். இந்நிலையில், ஏற்கனவே முடிவு செய்தபடி, ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில், கெளதம்மேனன் இயக்கும் அஜீத்தின் புதிய பட பூஜை பிப்ரவரி மாதம் 6-ந்தேதி சென்னையில் ஏ.எம்.ரத்னம் கட்டியுள்ள சாய்பாபா கோயிலில் நடைபெறுகிறது.
குறிப்பாக, சமீபகாலமாக, தனது படங்களின் பூஜை, படப்பிடிபபு தொடங்கும் நாள், படம் வெளியாகும் நாள் என அனைத்துமே வியாழக்கிழமையாக இருக்க வேண்டும் என்று அஜீத் செண்டிமென்டை கடைபிடித்து வருவதால், இப்படத்தின் பூஜையை பிப்ரவரி 6-ந்தேதியான வியாழக்கிழமை அன்று நடத்துகிறார்களாம். இந்த பூஜையில், அஜீத், அனுஷ்கா ஆகியோரும் கலந்து கொள்கிறார்களாம்.