ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் வெற்றிக்குப்பிறகு கெளதம் மேனனை சில எதிர்பாராத பிரச்னைகள் தடுமாற வைத்து விட்டன. விஜய் வைத்து யோஹன் அத்தியாயம் ஒன்று படத்தை இயக்கயிருந்தது தடைபட்டது. அதன்பிறகு சூர்யாவைக்கொண்டு இயக்கயிருந்த துருவநட்சத்திரம் தடைபட்டது. என மாறி மாறி படங்கள் முடக்கப்பட்டு அவரை நிலைதடுமாற வைத்தன.
இருப்பினும், அஜீத், சிம்பு போன்ற நடிகர்கள் அவருக்கு தக்க சமையத்தில் கால்சீட் கொடுத்து ஆதரித்ததால் தற்போது சிம்பு நடிககும் படத்தை இயக்கி வருபவர், அடுத்து அஜீத்தை இயக்கும் பட வேலைகளிலும் இறங்க தயாராகி விட்டார். ஆக, கெளதம்மேனனின் வட்டாரம் தற்போது பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இந்தி ரீமேக்கான ஏக் தீவானா தா என்ற படத்தை தயாரித்த ஆர்.எஸ். இண்போடெயின்மென்ட் என்ற பட நிறுவனத்திடம் கெளதம்மேனனின் போட்டோன் கதாஸ் நிறுவனம் பண மோசடி செய்து விட்டதாக அவர் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
ஆனால் இந்த வழக்கினை கண்டு தடுமாறாமல் அதை தில்லாக சந்திக்க தயாராகி விட்டார் கெளதம்மேனன். நான் எந்த தவறும் செய்யவில்லை. அதற்கு போதுமான ஆதாரமும் என்னிடம் உள்ளது. பிறகு நான் எதற்காக களங்க வேண்டும் என்கிறார்.
மேலும், இந்த விசயத்தில் எனது நண்பர்களான நடிகர் சரத்குமார், இசையமைப்பாளர் ஹாரிஸ்ஜெயராஜ் ஆகியோரும் என்பக்கம் உள்ள நியாயத்தை தயாரிப்பாளர் சங்கத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அதனால் இதுபோன்ற நல்லவர்களின் ஆதரவும், எனது நியாயமான செயல்பாடும் எனக்கு கண்டிப்பாக வெற்றியை பெற்று தரும் என்று நம்பிக்கையோடு சொல்கிறார் கெளதம்மேனன்.