இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நாளைய இயக்குனர்கள் நிகழ்ச்சியில் விருது பெற்ற என்.ராஜேஷ்குமார் என்பவர் தனது தாய்மாமன் கே.பாலசுப்பிரமணியத்துடன் இணைந்து தயாரிக்கிற படம் சிக்கிக்கு சிக்கிக்கிச்சு. அவரே இயக்கியும் உள்ளார். முழு கதையும் ரெயிலிலேய நடக்கிற மாதிரி படம். மிதுன், மிருதுளா ஹீரோ, ஹீரோயினாக நடித்துள்ளனர். விஜய் பெஞ்சமின் என்கிற புதுமுகம் மியூசிக் போட்டிருக்கிறார். படத்தின் ஆடியோ ரிலீஸ் பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. சரத்குமார், எழில் உள்ளிட்ட பிரமுகங்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய ஹீரோயின் தனது மலையாள தமிழில், "தயாரிப்பாளர் எனக்கு மாமா. நான் அவரை மாமா மாமான்னுதான் கூப்பிடுவேன். எல்லோரும் மணிமாமா மணிமாமான்னுதான் கூப்பிடுவோம்" என்று பேச எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். ஏதாவது தப்பா பேசிவிட்டோமோ என்று மிருதுளா ஒரு நிமிடம் ஆடிப்போய்விட்டார். அருகில் நின்றிருந்த இயக்குனர் மிருதுளாவிடம் சினிமாவில் மாமா என்றால் என்ன அர்த்தம் என்பதை சொல்ல கையால் முகத்தை மூடிக்கொண்டு வெட்கத்தால் குனிந்து கொண்டார்.
அருகில் அமர்ந்திருந்த நடிகர் டெல்லி கணேஷ் மைக்கை பிடித்துக் கொண்டு "மாமா என்பது அழகான உறவு. அந்த வார்த்தையை கெட்ட வார்த்தையா மாத்தி வச்சிருக்கோம். மிருதுளா சொன்னது தாய்மாமன் என்கிற அர்த்த்தில்தான்" என்று விளக்கம் அளித்தார்.
மீண்டும் பேசிய மிருதுளா "சத்தியமா எனக்கு அந்த அர்த்தம் தெரியாது. எனக்கு அவர் அங்கிள் போதுமா?" என்றார். (அருகில் உள்ள படத்தில் இருப்பது தயாரிப்பாளரும், மிருதுளாவும்)