மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி |
தெரு நாய்கள் மீது அதிக பாசம் கொண்ட த்ரிஷா, சமீபகாலமாக பீட்டா என்ற பிராணிகள் நலவாரியத்தில் தன்னை இணைத்துக்கொண்டு நாய்களின் பாதுகாவலனாக வலம்வந்து கொண்டிருக்கிறார். அவரைத் தொடர்ந்து மதராசப்பட்டினம், தாண்டவம் படங்களையடுத்து ஐ படத்தில் நடித்து வரும் ஹாலிவுட் நடிகை எமி ஜாக்சனுக்கும் இப்போது நாய், பூனைகள் மீது பாசம் ஏற்பட்டுள்ளது.
அதனால் த்ரிஷாவைத் தொடர்ந்து பீட்டா அமைப்பில் தன்னையும் இணைத்துக்கொண்டுள்ள எமி, அனாதையாக கிடந்த சில பூனைக்குட்டிகளையும் தத்தெடுத்து வளர்த்து வருகிறாராம். இதைத் தொடர்ந்து, சமயம் கிடைக்கும்போது பிராணிகள் குறித்த விழிப்புணர்வு பிரசாரங்களிலும் ஈடுபட்டு வருகிறார் எமி.
மேலும், பிராணிகளை ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து வாங்குபவர்களை கருத்தில் கொண்டு ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளார். அதில், நாய், பூனைகளை பணம் கொடுத்து வாங்குவதை நிறுத்துங்கள். அனாதையாக எத்தனையோ பிராணிகள் சுற்றித்திரிகின்றனர். சரியா உணவு இல்லாமல் நோய்களுக்கு சிகிச்சை இல்லாமல், விபத்தில் சாகும் ஆபத்துக்களோடு வாழும் இந்த விலங்குகளுக்கு கருணை காட்டுங்கள், அவற்றுக்கு நாம் அடைக்கலம் கொடுத்து ஆதரிக்கலாம். இதனால் ஒரு வாயில்லா ஜீவனுக்கு ஆதரவு கொடுத்த சந்தோசமும் கிடைக்கும், நம்முடைய பணமும் மிச்சமாகும் என்றும் தெரிவித்துள்ளார் எமி.
எமியின் இந்த அட்வைஸ், பல ஆயிரங்களை செலவு செய்து நாய், பூனைக்குட்டிகளை வாங்குபவர்களை சற்றே யோசிக்க வைத்திருக்கிறது.