மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? |
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, போஜ்பூரி ஆகிய மொழிகளைச்சேர்ந்த சினிமா நடிகர்கள் பங்கேற்கும் சிசிஎல் நட்சத்திர கிரிக்கெட் போட்டி வருகிற 25-ந்தேதி மும்பையில் தொடங்குகிறது. 25-ந்தேதி மாலை 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியில் தமிழ் நடிகர்களின் சென்னை ரைனோஸ் அணியும், இந்தி சினிமாவில் மும்பை ஹீரோஸ் அணிகளும் மோதுகின்றன. அதேநாளில் இரவு 7 மணிக்கு போஜ்பூரி அணியும், வீர்மராத்தி அணியும் மோதுகின்றன.
அதன்பிறகு 26-ந்தேதி, பெங்களூரில் நடக்கும் போட்டியில், மாலை 3 மணிக்கு தெலுங்கு நடிகர்கள் அணியும், மலையாள நடிகர்கள் அணியும் மோதுகின்றன. அதன்பிறகு பிப்ரவரி 1-ந்தேதி துபாயில் நடக்கும் போட்டியில், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மூன்று மொழி அணிகளும் மாறி மாறி மோதிக்கொள்கிறார்களாம்.
அதற்கடுத்து 2-ந்தேதி சென்னையில் நடக்கும் போட்டியில், தமிழ், இந்தி, போஜ்பூரி, கன்னடம் அணிகள் களமிறங்குகின்றன. தொடர்ந்து நடைபெறும் இந்த சிசிஎல் நட்சத்திர கிரிக்கெட் விளையாட்டின் இறுதி போட்டி பிப்ரவரி 23-ந்தேதி நடைபெறுகிறது.
முன்னதாக, சென்னை ரைனோஸ் அணியில் விளையாடியிருக்கும் விஷால், விஷ்ணு, சிவா, ஜீவா, ஜித்தன் ரமேஷ், ஆர்யா, சாந்தனு, ஸ்ரீகாந்த், ஷாம், பரத், பிருத்வி, ரமணா, விக்ராந்த் உள்ளிட்ட நடிகர்கள் இம்மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே அவ்வப்போது பயிற்சியிலும் ஈடுபட்டு வந்தவர்கள், 25-ந்தேதி நடைபெறும் முதல் நாள் போட்டியில் மும்பை ஹீரோஸ் அணியுடன் தாங்கள் மோதுவதால், மும்பைக்கு செல்ல தயாராகிக்கொண்டிருக்கின்றனர்.