ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்தருக்கு சிலம்பரசன், குறளரசன், இலக்கியா ஆகிய மூன்று பிள்ளைகள். இதில் சிம்பு சினிமாவில் நடிகராகி விட்டார். அவரைத் தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். ஆக, அண்ணனும், தம்பியும் சினிமாவில் பிசியாகிக்கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில், தனது மகள் இலக்கியாவுக்கு திருமணம் செய்து வைக்க நிச்சயித்துள்ளாராம் டி.ஆர்., பிப்ரவரி மாதம் 10-ந்தேதி திருமணம் விமரிசையாக நடைபெற உள்ளதாம். அதனால் திருமண வேலைகளில் டி.ஆர். குடும்பத்தினர் தடபுடலாக ஈடுபட்டிருக்க, சமீபத்தில் பழனி முருகன் கோயிலுக்கும் சென்று தரிசனம் செய்து விட்டு திரும்பியுள்ளார்களாம்.
மேலும், சிம்பு-ஹன்சிகா காதல் செய்திகள் வெளியான நேரத்தில், சினிமாவில் உயிரைக்கொடுத்தேனும் காதலர்களை சேர்த்து வைத்து வரும் நான், என் மகன் யாரையாவது காதலிப்பதாக சொன்னாலும் சேர்த்து வைப்பேன் என்று ஒரு விழாவில் தெரிவித்தார். அதோடு, என் மகனிடம் திருமணம் பற்றி நான் பேச்செடுத்தபோது, முதலில் தங்கை இலக்கியாவின் திருமணம் முடியட்டும், அதன்பிறகு என் திருமணத்தைப்பற்றி முடிவெடுக்கலாம் என்று கூறி விட்டான்.
அந்த அளவுக்கு தங்கை திருமணத்திற்கு பிறகுதான் நான் திருமணம் செய்து கொள்வேன் என்று பொறுப்போடு என் மகன் சொன்னது எனக்கு மிகுந்த சந்தோசத்தைத்தந்தது என்றும் சொன்னார் டி.ஆர்., இந்த நிலையில், தற்போது இலக்கிய திருமணம் அடுத்த மாதம் நடைபெறுவது உறுதியாகி விட்டதால், இந்த ஆண்டிலேயே சிம்பு-ஹன்சிகாவின் திருமணமும் நடக்கும் என்று கூறப்படுகிறது.