டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
எம்.ஜி.ஆர்., சினிமாவில் இருந்து வந்து முதலமைச்சரானதையடுத்து பெரும்பாலான நடிகர்களுக்கு அரசியல் மீதும் ஒரு கண் இருந்து கொண்டிருக்கிறது. சினிமாவில் மார்க்கெட் அவுட்டாகிறது என்றதும் அடுத்தகட்டமாக அரசியலில் பிரவேசித்து தங்களது அடுத்த ஆட்டத்தை தொடங்கி விடுகிறார்கள்.
ரஜினி அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்க்காத விஜயகாந்த் முழுநேர அரசியல்வாதியாகி விட்டார். இந்த நிலையில், அவர்களுக்கு அடுத்து சினிமாவில் வலம் வந்த நவரச நாயகன் கார்த்திக்கும் அரசியலில் தன்னை இணைத்துக்கொண்டு வருகிறார். முதலில் பார்வர்டு பிளாக் கட்சியில் இருந்தவர், அதன்பிறகு அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியை தொடங்கி தேர்தல் வரும் நேரங்களில் மட்டுமே அதை மக்களுக்கு ஞாபகப்படுத்திக்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், அடுத்து எம்.பி தேர்தல் வரப்போவதால் கார்த்திக்கும், கட்சி தொண்டர்களை தட்டி எழுப்பி வருகிறார். சில ஊர்களுக்கு சென்று கூட்டம் கூட்டி தேர்தலுக்கு தயாராவோம் என்று அழைப்பு விடுத்து வருகிறார். இதையடுத்து, சில தினங்களுக்கு முன்பு மதுரையை அடுத்த திருப்பரங்குன்றம் பகுதியில் கட்சி ஆலோசனைக்கூட்டம் நடத்தி விட்டு அங்கிருந்து காரில் சில தொண்டர்களுடன் திரும்பிக்கொண்டிருந்தாராம் கார்த்திக்.
அப்போது, அவரது கார் மீது சிலர் சரமாரியாக கல் வீசி தாக்கிவிட்டு தப்பியோடி விட்டார்களாம். இதனால் காருக்குள் இருந்த கார்த்திக் அதிர்ஷ்டவசமாக தப்பித்தபோதும், அவருடன் இருந்த சில தொண்டர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டதாம். இதையடுத்து காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில், அவரது கட்சியில் இருக்கும் சில அதிருப்தியாளர்களே இந்த தாக்குதலை நடத்தியதாக தெரியவந்துள்ளதாம்.