மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பில்லா படம் மூலம் அஜீத்துடன் இணைந்தவர் விஷ்ணுவர்தன். அதையடுத்து அவர்கள் இணைந்த ஆரம்பம் படமும் ஹிட்டானதால், இருவரும் வெற்றிக்கூட்டணியாகி விட்டார்கள். அதேபோல், சமீபத்தில் வெளியான வீரம் படமும் வெற்றி பெற்றிருப்பதால், சிறுத்தை சிவாவும் அஜீத்தின் செண்டிமென்ட் இயக்குனராகி விட்டார்.
இந்த நிலையில், அடுத்த மாதம் முதல் ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில், கெளதம்மேனன் இயக்கும் படத்தில் நடிக்கிறார் அஜீத். ஆனால், அந்த படத்தை முடித்ததும் அவர் மீண்டும் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிக்கப்போவதாகவும், அதற்கான கதை விவாதத்தில் அவர் ஈடுபட்டுள்ளதாகவும் தற்போது வேகமாக செய்தி பரவிக்கொண்டிருக்கிறது.
இதுபற்றி விஷ்ணுவர்தனைக் கேட்டபோது, அடுத்து நான் படம் இயக்கப்போவது உண்மை. அதற்கான கதை விவாதம் துரிதமாக நடைபெற்று வருகிறது. ஆனால், அது அஜீத்துக்கான கதை அல்ல. வேறு நடிகரை வைத்து இயக்குகிறேன். மேலும், அந்த படத்தில் ஆர்யா நடிப்பது போலவும் இன்னொரு செய்தி உலவிக்கொண்டிருக்கிறது. ஆனால், அதுவும் உண்மையல்ல. இப்போதைக்கு சஸ்பென்சாக வைத்திருக்கும் அந்த செய்தியை கூடியசீக்கிரமே வெளியிடுவேன் என்கிறார் விஷ்ணுவர்தன்.