ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பன்னீர் புஷ்பங்கள் படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் சுரேஷ், அதன் பிறகு தமிழ், தெலுங்கு மலையாள மொழிகளில் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். பல வருடங்களுக்கு பிறகு கிழக்கு கடற்கரை சாலை படத்தின் மூலம் ரீ-என்ட்ரி ஆனார். இப்போது குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோக்களை நடத்தி வருகிறார். விரைவில் ஒரு படத்தை இயக்கி டைரக்டராகவும் இருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: படம் இயக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. 250 படங்களுக்கு மேல் நடித்த அனுபவம் இருக்கிறது. 100க்கும் மேற்பட்ட டைரக்டர்களுடன் பணியாற்றி இருக்கிறேன். வாழ்க்கையின் பெரும்பகுதி காலத்தை ஷூட்டிங் ஸ்பாட்டில் கழித்திருக்கிறேன். இது போதாதா ஒரு படம் டைரக்ட் பண்ணுவதற்கு. லவ் அண்ட் காமெடி, ஆக்ஷன் வித் த்ரில்லர் என இரண்டு கதைகள் தயாராக இருக்கிறது. நடிகர்களுடன் பேசி வருகிறேன். அது முடிவானதும் முறையான அறிவிப்பு வரும். நடித்துக் கொண்டே படங்களும் டைரக்ட் செய்ய முடிவு செய்திருக்கிறேன் என்றார்.