தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இளம் இசை அமைப்பாளர் அனிருத் சமீபத்தில் தான் இசை அமைத்து பாடிய ஆங்கில ஆல்பம் ஒன்றை யூ டியூப்பில் அப்லோட் செய்திருந்தார். இதில் பெண்களை பற்றி குறிப்பாக தாய்மார்களை பற்றி ஆபாசமாக வர்ணித்திருப்பதாகவும், ஆபாச ஆங்கில வார்த்தைகளை பாடல் முழுவதும் வைத்திருப்பதாகவும் புகார் எழுந்தது. இதுகுறித்து உயர்நீதி மன்ற வழக்கறிஞர் ஜெபதாஸ் பாண்டியன் என்பவர் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். புகார் மீது நடவடிக்கை எடுக்குமாறு சைபர் கிரைம் பிரிவுக்கு கமிஷனர் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்த அனிருத்தின் தந்தை ரவிராகவேந்தர் நேற்று (ஜனவரி 21) போலீஸ் கமிஷனரை சந்தித்து பேசினார். அப்போது அவர் அந்த ஆல்பத்தை யு டியூப்பில் இருந்து நீக்கிவிட்டதாகவும், தவறான நோக்கத்துடன் அதை வெளியிடப்படவில்லை என்றும், எதிர்ப்பு கிளம்பியிருப்பதால் நீக்கி விட்டதாவும், மேற்கொண்டு நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டதாக போலீஸ் வட்டரா தகவல்கள் தெரிவிக்கிறது. என்றாலும் மனுதாரார் புகாரை வாபஸ் பெற்றால்தான் விசாரணையை நிறுத்த முடியும் என்றும், அதுவரை நடவடிக்கை தொடரும் என்றும் தெரிகிறது.