டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
புதியவர்கள் இணைந்து பரிசல் என்ற படத்தை எடுத்திருக்கிறார்கள். மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஒரு ஊருக்குச் செல்ல அணையை தாண்டி பரிசலில்தான் செல்ல வேண்டும் வேறு பாதை கிடையாது. பல ஆண்டுகாலமாக பரிசல்தான் அவர்களுக்கு எல்லாமே.
முதன் முறையாக ஹீரோ அரசுக்கு கோரிக்கை வைத்து பாலம் கட்ட ஏற்பாடு செய்கிறான். பரிசலை வைத்து பணம் சம்பாதிக்கும் சிலரும். உள்ளூரில் மக்களை அடிமையாக வைத்திருக்கும் ஒருவனும் சேர்ந்து ஹீரோவின் இந்த முயற்சியை முறியடிக்க நினைக்கிறான். அவன் இருந்தால் ஊருக்கு பாலம் வராது என்பதை அறிந்த ஹீரோயின், வில்லனை போட்டுத் தள்ளிவிட்டு ஜெயிலுக்கு போகிறாள். ஹீரோ கஷ்டப்பட்டு பாலத்தை கட்டுகிறான். மக்கள் பாலத்தில் சந்தோஷமாக சென்று வர இவன் மட்டும் காதலியின் வருகைக்காக பாலத்திலேயே காத்திருக்கிறான்.
"இது நிஜத்தில் நடந்த கதை. அதை அப்படியே படம்புடிச்சிருக்கோம். ஹீரோ சக்திமாறன், ஹீரோயின் கல்பனா ஜெயம் என்ற நியூபேஸ்கள். சினிமாவுக்கு தொடர்பே இல்லாதவர்கள் இணைந்து இதனை எடுத்திருக்கோம்" என்கிறார் டைரக்டர் எம்.சுந்தர்.