ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களெல்லாம் இன்றைக்கும் ரீ-ரிலீசாகிக்கொண்டிருக்கிறது. அதோடு டிஜிட்டல் தொழில் நுட்பத்துக்கும் மாற்றப்பட்டு மீண்டும் மக்களின் பார்வைக்கு வந்தவண்ணம் உள்ளன. ஆனால், சமீபகாலத்து படங்கள் அப்படியில்லை. ஒருமுறை ரிலீசானதும், அதன்பிறகு தியேட்டர்களுக்கு வருவதில்லை. டி.விக்களில்தான் அவ்வப்போது ஒளிபரப்பாக்கிக்கொண்டிருக்கின்றன.
இந்தநிலையில், ஏற்கனவே வெளியான சில படங்களின் திரைக்கதையை புத்தக வடிவில் வெளியிடும் நிலை உருவாகியிருக்கிறது. முதலாவதாக விஸ்வரூபம் படத்தின் திரைக்கதையை மலையாளத்தில் வெளியிட்டார் கமல். ஷார்ஜாவில் நடந்த புத்தக கண்காட்சியில் வெளியிடப்பட்டது. அதையடுத்து, பலருக்கும் அந்த ஆசை வரவே, சமீபத்தில் தனது சுப்ரமணியபுரம் படத்தின் திரைக்கதை புத்தகத்தை ஆங்கிலத்தில் வெளியிட்டார் சசிகுமார்.
அதைத் தொடர்ந்து 1995ல் நாசர்-ரேவதி நடித்து வெளியான அவதாரம் படத்தின் திரைக்கதையும் புத்தகமாக்கப்பட்டுள்ளது. நாசர் இயக்கி நடித்த இப்படம் அந்த சமயத்தில் விமர்சகர்களால் பேசப்பட்டது. இளையராஜா அற்புதமாக இசையமைத்துக் கொடுத்திருந்தார். இப்படத்தின் திரைக்கதை புத்தகத்தை தற்போது சென்னையில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியில் நாசரின் மனைவி கமீலா நாசர் வெளியிட்டுள்ளார்.