தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இந்தி நடிகை சமீரா ரெட்டி, தொடர்ந்து நடுநிசி நாய்கள், வெடி, வேட்டை போன்ற படங்களில் நடித்தார். ஆனால் அதன்பின் அவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. அதனால் வாடிய முகத்துடன் மீண்டும் மும்பைக்கே திரும்பினார். இந்தநிலையில் அவருக்கு தொழிலதிபர் ஒருவருடன் காதல் மலர்ந்திருப்பதாக செய்திகள் வந்தன. ஆனால் அப்போது அதனை மறுத்தார் சமீரா.
இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் சமீராவுக்கும், தொழில் அதிபரும், மோட்டார் பைக் நிறுவன அதிபருமான அக்ஷய் வர்தாவுக்கும் ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்தது. மேலும் திருமணம் ஏப்ரலில் நடக்க இருப்பதாகவும் முடிவு செய்யப்பட்டது. ஆனால் இப்போது திடீர் திருப்பமாக இன்று(ஜனவரி 21ம் தேதியே) அவர்கள் திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை சமீராவின் தாயார் உறுதிபடுத்தியுள்ளார். மும்பையில் இன்று மாலை நடந்த இந்த திருமணத்தில் இரு வீட்டாரது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டும் கலந்து கொண்டனர்.
ஏப்ரல் மாதத்தில் திருமணம் செய்வதாக அறிவித்துவிட்டு, இப்போது திடீரென சமீரா இன்று திருமணம் செய்ய முடிவெடுத்து இருப்பதற்கான காரணம் பற்றி விசாரித்தபோது, அகாஷியின் தொழில் நடவடிக்கைகள் காரணமாக, முன் கூட்டியே திருமணத்தை நடத்தியதாக சமீரா கூறியுள்ளார்.