பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
உதயநிதி ஸ்டாலின் தயாரித்து, நடிக்கும் ''இது கதிர்வேலன் காதல்'' படத்தின் இசை வெளியீட்டை தொடர்ந்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அப்பட நாயகன் உதயநிதி ஸ்டாலின், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன், ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியெம், படத்தொகுப்பாளர் டான் பாஸ்கோ, நடன அமைப்பாளர் தினேஷ், நட்சத்திரங்கள் சரண்யா பொன்வண்ணன், ஆடுகளம் நரேன், டாக்டர் பாரத்ரெட்டி, சிறப்பு விருந்தினர் இயக்குநர் சீனு ராமசாமி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டு பேசினர். (இப்படத்தின் நாயகி நயன்தாரா மற்றும் காமெடி நாயகர் சந்தானம் அப்சென்ட் என்பது கவனத்தில் கொள்ள வேண்டியது) அதில், சூடு, சுவாரஸ்யமான நிகழ்வுகள், இங்கு உங்களுக்காக...
இந்நிகழ்வில் பேசிய ''இதுகதிர்வேலன் காதல்'' தயாரிப்பாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின், 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தின் சந்தோஷசத்தில் இருந்த நேரம், 'சுந்தரபாண்டியன்' படம் பார்த்தேன். அந்த படத்தின் இயக்குநர் இயக்கத்தில், நான் ஒரு படம் நடித்தால் நல்லா இருக்கும் என்று தோன்றியது. உடனே அவரை அழைத்து தனக்கு ஏற்றபடி ஏதும் ஸ்கிரிப்ட் இருந்தால் சொல்லுங்க என்றேன், அவரும் ஒருவாரத்தில் வருவதாக சொல்லி சென்றார். அதேமாதிரி ஒருவாரம் கழித்து அவரும் இரண்டு ஸ்டோரி லைன் உடன் என்னை வந்து ரெட் ஜெயன்ட் அலுவலகத்தில் சந்தித்தார். இரண்டு கதைகளுமே பிடித்து இருந்தது. அதில் ஏதாவது ஒன்றை எனக்கு ஏற்றபடி திரைக்கதையாக்க சொன்னேன். இரண்டையும் சேர்த்து ஒரே கதையாக்கி கொண்டு வந்தார். அதுதான் ''இது கதிர்வேலன் காதல்'' படமாக வந்திருக்கிறது.
இதில், கதிர்வேலன் எனும் நாயகர் கேரக்டரில் நானும், மயில்வாகனம் எனும் கேரக்டரில் சந்தானமும், பவித்ராவாக நயன்தாராவும் நடித்திருக்கிறோம். நான் நடிக்கும் படங்களில் டான்ஸ் மாஸ்டர் பாடு தான் மிகவும் கடினமானது. இதிலும் டான்ஸ் மாஸ்டர் தினேஷிடம் போன ஒரு கல் ஒரு கண்ணாடியை விட சிறப்பாக வர வேண்டும் என்று ரிகர்சல் பார்த்து, ரிஸ்க் எடுத்து ஆட்டம் போட்டுள்ளேன் என்றார் உதயநிதி ஸ்டாலின்.
அவரைத்தொடர்ந்து இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியெம், நடன இயக்குநர் தினேஷ், சரண்யா பொன்வண்ணன், 'ஆடுகளம்' நரேன், சிறப்பு விருந்தினர் சீனு ராமசாமி ஆகியோரும் இப்படம் பற்றி பேசினர். அவர்களை தொடர்ந்து பேசிய இயக்குநர் பிரபாகரன்; சுந்தரபாண்டியன்' படத்தை அடுத்து எனக்கு பெரும் ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியமும், பெரும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜூம் கிடைத்தற்கு காரணம் ரெட் ஜெயன்ட் மூவிஸ் மற்றும் உதயநிதி ஸ்டாலினும் தான். அதை மனதில் வைத்து இந்தபடத்தை சுந்தரபாண்டியனை விட ஒரு பங்கு மேலாக ஜனரஞ்சகமாக உருவாக்கி இருக்கிறேன் என்றார்.
அவரிடம் கேள்விநேரத்தில் நமது நிருபர் இரண்டே இரண்டு கேள்விகள் கேட்டதும், அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு...
நமது நிருபர் : இங்கு பேசிய எல்லோரும் உதயநிதி ஸ்டாலின், 'ஓகே ஓகே'-வை காட்டிலும் இந்த கதிர்வேலன் காதல் படத்தின் பாடல்காட்சிகளில் ஆடுவதற்கு நிறைய பயிற்சி பெற்றார் என்றும், ரிகர்சல் எல்லாம் பார்த்தார் என்றும் கூறினார்கள். இதில், உதயநிதி ஸ்டாலின் பாடல் காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தியதற்கான காரணம் ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்பதா? அல்லது உடன் ஆடிய நயன்தாராவை கவருவதற்காகவும், அவரை ஓவர்டேக் பண்ண வேண்டும் என்பதற்காகவுமா..?
இயக்குநர் : அவர் ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்பதற்காக தான் ரிஸ்க் எடுத்து, நடன காட்சிகளில் ரிகர்சல் பார்த்து நடித்தார். நீங்கள் வேண்டுமானால் அவர் நயன்தாராவுக்காக ரிஸ்க் எடுத்தார், ரிகர்சல் பார்த்தார் என்று எழுதுங்கள். அது படத்திற்கு பப்ளிசிட்டியாகட்டும். (இயக்குநர் அளித்த பதிலுக்கு எந்த ரியாக்ஷ்னும் காட்டாமல் கேள்வியையும், பதிலையும் ரசித்து படி இருந்தார் உதயநிதி ஸ்டாலின்...)
நமது நிருபர் : கதிர்வேலனாக உதயநிதியையும், மகிழ்வாகனன் எனும் நண்பர் பாத்திரத்தில் சந்தானத்திற்கும் பாத்திர பெயர் சூட்டப்பட்டிருப்பதற்கு காரணம் என்ன? கடவுள் பெயர் தான் என முடிவானதும் தமிழ் கடவுள் முருகனின் பெயரை சூட்டுங்கள் என உதயநிதி ஏதாவது 'சஜசன்' கொடுத்தாரா..?
இயக்குநர் : அதெல்லாம் எதுவும் கிடையாது... இது தமிழகத்தின் 'சவுத்'., தென் மாவட்ட காதல் கதை என்பதால், அந்த பகுதியில் புழங்கும் பெயர்களை இப்பட பாத்திரங்களுக்கு சூட்டியிருக்கிறேன் என்றார் இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன்.
''இது கதிர்வேலன் காதல்'' ரசிகர்களின் காதலாக பிரதிபலிக்க., பிரகாசிக்க... நாமும் வாழ்த்திவிட்டு வந்தோம்!!