ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சாதாரணமாக தனக்கு பிடித்தமான ஹீரோக்களின் படங்கள் என்றால் காமெடியை கொஞ்சம் ஓவராகவே தெளித்து விடுவார் சந்தானம். ஆர்யா, நடிக்கும் படமென்றால், அவர் இவரை விடமாட்டார். நைட்டு 12 மணிக்குகூட சந்தானத்துக்கு போன் போட்டு, என்ன மச்சான் காமெடி சீன் ரெடியாச்சா? என்று கேட்பார். அப்போது சந்தானம் சொல்லும் டயலாக்குகள் ஒருவேளை தனக்கு பிடிக்கவில்லை என்றால், இதையெல்லாம் தூக்கி கடாசிட்டு வேற புதுசா யோசி மச்சான். இதையெல்லாம் கேட்டா ரசிகருங்க சிரிக்க மாட்டாங்க. சீரியசாயிடுவாங்க என்று நெத்தியடியாக தன் மனதில் பட்டதை சொல்லி, அவரிடமிருந்து புதுசு புதுசாக காமெடிகளை கறந்து எடுப்பார் ஆர்யா.
ஆனால், சில படங்கள் சந்தானத்துக்கே பிடித்து விட்டால் அவர்கள் சொல்லாமலேயே இவராக மெனக்கெடுவாராம். அந்த வகையில் ஒரு கல் ஒரு கண்ணாடியில் தனக்கும் உதயநிதிக்கு இணையான சீன்கள் கொடுத்து ஒரு பாடல் காட்சியிலும் தன்னை ஆடிப்பாட வைத்ததால், இப்போது அதே உதயநிதியுடன மீண்டும் கைகோர்த்திருக்கும் இது கதிர்வேலன் காதல் படத்தில் காமெடியை பெரிய அளவில் ஒர்க்அவுட் செய்திருக்கிறாராம் சந்தானம்.
குறிப்பாக இளைஞர்களை கவரும் வகையில், லவ்வுன்னு வந்தாலே நான்சிங்க்தான் மச்சான். பாடி சொல்றத மைண்டு கேட்காது. மைண்டு சொல்றத பாடி கேட்காது. இப்படி ஒன்னுக்கொன்னு சிங்காகாமலே இருக்கும் என்று பேசும் பன்ச், எல்லா பொண்ணுங்களும் சூர்யா மாதிரி பையன் வேணும்னுதான் சுத்துவாளுங்க, கடைசியில பாத்தா ஏரியா பசங்க எவனாச்சும் அவளுங்களை உஷார் பண்ணிட்டு போயிடுவான் என்று சந்தானம் பேசியுள்ள இன்னொரு பன்ச்சும் இடத்தின் ட்ரெய்லரில் வெளியாகி இப்போதே இளவட்டங்கள் மத்தியில் பத்திக்கொண்டுள்ளது.
இதேபோல் படம் முழுக்க நிறைய இளைஞர்களுக்கான யூத் பன்ச் காமெடி சரவெடிகளை கொளுத்திப்போட்டுள்ளாராம் சந்தானம். அதோடு, சமீபகாலமாக சில படஙக்ளில் டபுள் மீனிங்கில் டயலாக் பேசி சர்ச்சைகளில் சிக்கிக்கொண்ட சந்தானம், இந்த படத்தில் எந்த விரசமான டபுள் மீனிங் டயலாக்குகளும் இல்லாமல் பேசியுள்ளாராம். அந்த வகையில், இந்த படத்துக்காக நிறையவே உழைத்துள்ளாராம் சந்தானம். அவரது காமெடி படத்துக்கு பெரிய ப்ளசாகப்போகிறது என்கிறார் படத்தின் இயக்குனர் பிரபாகரன்.