பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
லட்சுமிமேனன் கும்கி படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது, அவரைத்தேடி பல பட வாய்ப்புகள் வந்ததாம். ஆனால், அப்படங்களை கொண்டு வந்த மேனேஜர்கள் அவரை கதையே கேட்க விடாமல், அக்ரிமென்டில் சைன் வாங்குவதில் மட்டுமே குறியாக இருந்தார்களாம். அவர்கள் கொடுத்த நெருக்கடி காரணமாக, விசயம் தெரியாமல் இரண்டு படங்களில் நடிக்கக்கூட ஒப்பந்தமாகி விட்டாராம் லட்சுமிமேனன்.
ஆனால், அதன்பிறகு அவர், சுந்தரபாண்டியன் உள்ளிட்ட படங்களில் நடிக்கத் தொடங்கியபோது, அவர் ஏற்கனவே ஒப்பந்தமாகியிருந்த படங்களின் படப்பிடிப்புகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டு விட்டதாம. ஆனால், அதையடுத்து, அப்பட டைரக்டர்களை அணுகி விவரத்தை கேட்டறிந்த லட்சுமிமேனன், எந்த மாதிரி கதையை படமாக்கயிருந்தீர்கள்? என்று கேட்டபோது, அவர்கள் சொன்ன கதை, அவரை தூக்கி வாரிப்போட்டதாம். அதில் ஒரு படத்தில் மைனாவில் அமலாபால் நடித்தது போன்ற காமக்கொடூர கதையாம்.
இதனால் அந்த படங்கள் மட்டும் எடுக்கப்பட்டிருந்தால், என் குடும்ப இமேஜே காலியாகியிருக்கும் என்று அதே மாறாத அதிர்ச்சியை இப்போதும் வெளிப்படுத்துகிறார். அதன்பிறகுதான் கதை விசயத்தில் உஷார்நிலையை பிரகடனப்படுத்தினாராம். யாராவது பெரிய கம்பெனி, பெரிய ஹீரோ என்று சொல்லிக்கொண்டு பணத்துடன் வந்தால், முதலில் கதையே சொல்லுங்கள், அதன்பிறகு நடிப்பதா? இல்லையா? என்பதை நான் சொல்கிறேன் என்று கூறத் தொடங்கினாராம் லட்சுமிமேனன்.
இதுமாதிரி கசப்பான பல அனுபவங்கள் சினிமாவில அவருக்கு நிகழ்ந்திருக்கிறதாம். அதனால், லட்சுமிமேனன் எளிதாக சினிமாவில் வளர்ந்து விட்டார் என்று யாராவது அவர் காதுபட சொன்னால், தனது ஆரம்ப கால சினிமா வாழ்க்கையில் நடந்த சில கசப்பான விசயங்களை சொல்லி அவர்களை ஆப் பண்ணி விடுகிறார் லட்சுமிமேனன்.