டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
திருடா திருடியில் அறிமுகமாகி, ''மன்மதராசா...'' பாட்டு மூலம் ஒரு காலத்தில் பட்டைய கிளப்பியவர் சாயாசிங். அதுக்கு பிறகு அவரால் பெருசா படம் அமையல. ஒரு சில படங்களில் நடித்தார். அனந்தபுரத்து வீடு படத்தில் தன்னுடன் நடித்த கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். வீட்டில் சும்மா இருந்தவர் சரோஜினி, பிரேம கதகளு என்ற கன்னட சீரியல்களில் நடித்தார். தமிழில் நாகம்மா என்ற சீரியலில் நடித்தார்.
இப்போது முதன் முறையாக ரியாலிட்டி ஷோ ஒன்றை நடத்துப்போகிறார். புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள "திறமை பொங்கும் தமிழகம்" என்ற நிகழ்ச்சியை நடத்துகிறார். இதற்காக தமிழம் முழுவதும் சென்று நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கிறார். இதே நிகழ்ச்சியில் பாடகர் விஜய் ஜேசுதாஸ், ப்ளாஷே ஆகியோர் நடுவர்களாக இருக்கிறார்கள்.
சாயாசிங் தற்போது கதிர்வேலன் காதல் படத்தில் உதயநிதி ஸ்டாலினின் அக்காவாக நடித்துள்ளார். இதுதவிர ஒரு போஜ்புரி படத்திலும் நடித்து வருகிறார்.