பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
பாலிவுட்டின் பிரபல நடிகர் சஞ்சய் தத். 1993ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில், ஆயுதம் வைத்திருந்த குற்றத்திற்காக சஞ்சய் தத்திற்கு முதலில் 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஒன்றரை வருடம் சிறையில் இருந்த சஞ்சய் பின்னர் ஜாமினில் வெளியே வந்தார். பின்னர் இவ்வழக்கு தொடர்பான இறுதி விசாரணையில், சஞ்சய் தத்திற்கு விதிக்கப்பட்ட 6 ஆண்டு தண்டனை 5 ஆண்டுகள் குறைக்கப்பட்டது. ஏற்கனவே ஒன்றரை வருடம் சிறையில் இருந்ததால் மீதமுள்ள மூன்றரை ஆண்டு காலம் சிறைவாசத்தை கண்டிப்பாக அனுபவிக்க வேண்டிய நிலைக்கு சஞ்சய் தத் தள்ளப்பட்டார்.
இந்நிலையில் கடந்தாண்டு தனது பட வேலைகளை எல்லாம் முடித்து சிறை சென்ற சஞ்சய் தத், ஏற்கனவே பரோலில் இரண்டு முறை வெளியில் வந்துள்ளார். தற்போது வெளிவந்திருக்கும் 2வது பரோல் காலம் வருகிற ஜனவரி 21ம் தேதி முடிவடைய உள்ள நிலையில், மேலும் அவருக்கு ஒரு மாதம் காலம் பரோல் வழங்கப்பட்டுள்ளது. தனது மனைவி மான்யா தத்திற்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தை காட்டி வெளியே வந்த சஞ்சய், தற்போது மீண்டும் மனைவியின் உடல்நலத்தை காரணம் காட்டியே பரோல் கேட்டார். சஞ்சய் தத்தின் பரோலை ஏற்று அவருக்கு மேலும் ஒரு மாத காலத்திற்கு பரோலை நீட்டித்து மகாராஷ்டிரா அரசும் உத்தரவிட்டுள்ளது.
மனைவியின் உடல்நிலை சரியில்லை என்று சஞ்சய் தத் பரோல் கேட்ட சமயம், அவரது மனைவி மான்யா பிறந்தநாள் பார்ட்டியில் பங்கேற்றது தொடர்பான படங்கள் வெளியானதும், அதனால் சஞ்சய் தத்திற்கு பரோல் வழங்க கூடாது என்றும் அப்போது பிரச்னை வெடித்தது குறிப்பிடத்தக்கது.