ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டில் இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் படம் காமசூத்ரா 3டி. வெறும் காமசூத்ரா படமே சூடேற்றும் அதுவும் இது 3டியில் எதிர்பார்ப்புக்கு கேட்கவா வேண்டும். டாப்லெஸ் போஸ் புகழ் ஷெர்லின் சோப்ராதான் ஹீரோயின். மொத்த அழகையும் 3டி மூலம் கண்ணுக்கு அருகில் காட்டப்போகிறார்.
இதற்கிடையில் படத்தின் இயக்குனர் ரூபேஷ் பாலுக்கும், ஷெர்லினுக்கும் மோதல் வெடித்திருக்கிறது. இருவருக்கும் என்ன பிரச்னையோ தெரியவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஷெர்லின் சோப்ரா தனது பேஸ்புக்கில் இயக்குனர் ரூபேஷை கெட்ட வார்த்தைகளால் திட்டி ஸ்டேட்டஸ் போட்டதுடன் படத்தை விட்டு விலகி விட்டதாகவும் கூறியிருந்தார்.
இதைப் பார்த்த ரூபேஷ் அதிர்ச்சி அடைந்தார். படத்தின் 75 சதவிகித பணிகள்தான் முடிந்துள்ள நிலையில் ஷெர்லின் வெளியிட்டிருக்கும் கருத்து அவருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. உடனே 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி விட்டார்.
"ஷெர்லின், என் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளை கூறி என் இமேஜுக்கு பங்கம் விளைவித்து விட்டார். இது என்னை அவமானப்படுத்தும் செயலாகும். ஷெர்லின் மீது எனக்கு தனிப்பட்ட வெறுப்பு எதுவும் கிடையாது. ஆனால் அவரது செயல்கள் என்னை அவமானப்படுத்திவிட்டது. இதற்காக அவர் மீது 5 கோடி நஷ்டஈடுகேட்டு வழக்கு தொடர இருக்கிறேன்" என்று கூறியிருக்கிறார் ரூபேஷ்.