தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சமீபத்தில் மறைந்த இயற்கை வேளாண் விஞ்சானி நம்மாழ்வார் பற்றி திரைப்பட பின்னணி இசை அமைப்பாளர் தாஜ்நூர் உழவன் தாத்தா என்ற ஆடியோ ஆல்பத்தை உருவாக்கி வெளியிட்டிருக்கிறார். இது சேலம் பகுதியில் மிகவும் பிரபலமாகி உள்ளது. ஈசன் என்ற அமைப்பு இந்த ஆல்பத்தை விவசாயிகளிடம் பரப்பி வருகிறது. இதற்கு கிடைக்கும் வரவேற்பைத் தொடர்ந்து அதை வீடியோ ஆல்பமாக தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் தாஜ்நூர்.
இந்த முயற்சி பற்றி அவர் கூறியதாவது: இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் நமக்கு கிடைத்த பெரிய சொத்து. ரசாயண உரங்கள் மண்ணை சாகடிப்பதை எதிர்த்து போராடினார். வெறும் பேச்சோடு நின்று விடமால் இயற்கை விவசாயத்தை லாபமான முறையாக மாற்றிக் காட்டினார். அவரது மரணம் இயற்கை விவசாயிகளுக்கு பெரும் இழப்பு. அவரை பற்றி ஒரு பாடல் இசைத்து தருமாறு சேலம் ஈசன் அமைப்பினர் என்னை அணுகினர். பொங்கல் திருநாளில் அதை கொண்டு வர வேண்டும் என்பதற்காக ஈசன் அமைப்பைச் சேர்ந்த இளங்கோவன் டாக்டர் சசி இணைந்து எழுதிய "உழவன் தாத்தா வந்திருக்கேன்" பாடலுக்கு மெட்டுப்போட்டு ஒரு நாள் இரவில் வேல்முருகனை பாட வைத்தேன். சேலம் பகுதியில் இந்த பாடல் பொங்கல் அன்று ஒலிபரப்பானது. நான் சினிமாவில் சம்பாதிக்காத புகழை இந்த ஒரு பாடலில் சம்பாதித்தேன்.
இப்போது மேலும் மூன்ற பாடல்களை சேர்த்து அதனை வீடியோ ஆல்பமாக தயாரிக்க இருக்கிறேன். இதற்காக நம்மாழ்வார் போன்ற தோற்றம் கொண்ட ஒருவரை தேடிக் கொண்டிருக்கிறேன். என்றார்.