Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நெட்டில் பரவிய காதல் வைரஸ்: கடுப்பில் நயன்தாரா

20 ஜன, 2014 - 10:05 IST
எழுத்தின் அளவு:

சிம்புவும் நயன்தாராவும் மன்மதன் காலத்தில் காதல் வயப்பட்டுக் கிடந்தார்கள். பட விளம்பரத்துக்காக நயன்தாரா உதட்டைக் கடித்து அதனை போஸ்டராக ஒட்டியபோதுகூட நயன்தாரா பொறுத்துக் கொண்டார். காரணம் அது சினிமா புரமோஷன். சின்ன கருத்து வேறுபாட்டுடன் இருந்த போது தனிமையில் எடுத்துக் கொண்ட லிப் லாக் கிஸ்சை நெட்டில் பரப்பிவிட்டது சிம்புதான் என்று கருதி காதலுக்கு கத்தரி போட்டார்.

பின்னர் நயன்தாரா, பிரபுதேவாவை காதலித்தார், கையில் பச்சை குத்திக் கொள்ளும் அளவுக்கு தீவிரமாக காதலித்தார். சிம்பு, ஹன்சிகாவை காதலித்தார். இப்போது இரண்டு பேரின் இரண்டாவது காதலும் பிரச்னையில் இருக்க இவர்கள் இப்போது ஒரு படத்தில் சேர்ந்து நடிக்கிறார்கள். அது சிம்புவின் சொந்தப் படம். "நான் கேட்ட சம்பளத்தை கொடுத்தாங்க நடிக்கிறேன். மற்றபடி இதில் எதுவும் ஸ்பெஷல் இல்லை" என்றார் நயன்தாரா.

பாண்டிராஜ் இயக்கும் படத்தில் கடந்த ஒரு வாரமாக நடித்து வருகிறார் நயன்தாரா. அவரது தனி போர்ஷனை எடுத்தார்கள். அமெரிக்காவுக்கு முக்கிய வேலையாக சென்றிருந்த சிம்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை திரும்பினார். பின்னர் அவர் வளசரவாக்கத்தில் உள்ள ஒரு பங்களாவில் நடந்த படப்பிடிப்பில் நயன்தாராவுடன் இணைந்து நடித்தார்.

இது நடந்து இரண்டு நாட்கள்தான் ஆகிறது. அதற்குள் சிம்புவும் நயன்தாராவும் சூட்டிங் ஸ்பாட்டில் சிரித்து பேசிக் கொண்டிருக்கும் படம் நெட்டில் வெளியிடப்பட்டு. அவர்கள் இருவருக்கும் இரண்டு நாட்களிலேயே மீண்டும் காதல் திரும்பி விட்டதைப்போல செய்தி பரப்பப்பட்டு விட்டது.

படப்பிடிப்பு முடிந்து ஜெயம் ராஜா டைரக்ஷனில், ஜெயம் ரவி நடிக்கும் படத்தில் நடிக்க பெங்களூருக்கு சென்று விட்டார் நயன்தாரா. அவருக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் செம கடுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. "யாருடன் நயன் நடித்தாலும் அவர்களுடன் சகஜமாக பேசிக் கொண்டிருப்பார். அப்படித்தான் அந்த ஹீரோவுடனும் பேசிக் கொண்டிருந்தார். அவர்தான் இந்தப் படத்தை வெளியிட்டிருப்பார் என்று உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் அவர் நினைத்திருந்தால் தடுத்திருக்க முடியும். இதுவே கூட ஒப்பந்தத்தை மீறிய செயல்தான். பட புரமோசனுக்காக தனிப்பட்ட முறையில் மேடத்தை பயன்படுத்திக் கொள்ள கூடாது என்பது ஒப்பந்தத்தில் ஒன்று. ஆரம்பத்திலேயே இப்படி என்றால் போக போக என்னவெல்லாம் நடக்குமோ என்று மேடம் கவலையில் இருக்கிறார்" என்கிறார்கள் நயனுக்கு நெருக்கமான ஒருவர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in