விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் |
ஜோகன்ஸ்பர்க்: பிரபல பாடகர் எஸ்.பி.,பாலசுப்ரமணியம் உடல் நலம் திடீரென பாதிக்கப்பட்டது. இதனையடுத்து தென் ஆப்ரிக்காவில் இருந்து அவசரமாக சென்னை திரும்பினார்.
தென்னாப்பிரிக்கா ஜோகன்ஸ்பர்க்கில், பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பியின் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த விழாவில் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட இருந்தது. இந்நிலையில், எஸ்.பி.பி.,க்கு திடீரென உடல் நலம் குன்றியது. இதனையடுத்து அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன. எஸ்.பி.பி., இந்தியா திரும்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்கள் பாடி லட்சக்கணக்கான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் எஸ்.பி.பி.
இவர் தமிழில் நடித்த கேளடி கண்மணி மற்றும் சிகரம் திரைப்படங்கள் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தது.