ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மகேஷ்பாபு நடித்திருக்கும் தெலுங்கு புதிய படம் நெனோகடேய்னே. இப்படத்தில் மகேஷ்பாபுவின் பின்னால் மண்டியிட்டபடி அப்பட நாயகியான கீர்த்தி சனோன் செல்வது போன்று வெளியான போஸ்டருக்கு தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையான சமந்தா எதிர்ப்பு தெரிவித்திருந்தார். கதாநாயகியை நாய் போன்று நடக்க விட்டு கேவலப்படுத்தி விட்டனர் என்று கூறியிருந்தார்.
இதனால், மகேஷ்பாபுவும், அவரது ரசிகர்கள் கொதித்தெழுந்து விட்டனர். சமந்தாவுக்கு எதிராக இணையதளங்களில் கருத்துக்களை வெளியிட்டு பிரச்னையை பெரிதாக்கினர். அதன்பிறகு சித்தார்த் உள்பட சிலர் சமந்தாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த பிறகே அந்த பிரச்னையை விட்டார் மகேஷ்பாபு.
இந்நிலையில், மீண்டும் அந்த பிரச்னை குறித்து ஒரு பேட்டியில் தெரிவித்துள்ள மகேஷ்பாபு, சமந்தா சொன்ன கருத்து குறித்து பீல் பண்ணி பேசியுள்ளார். அதாவது, அந்த படத்தில் நாங்கள் செய்திருப்பது தவறாகவே இருக்கட்டும். அதை சமந்தா என்னிடத்தில் சொல்லியிருக்கலாம். அவர் எனது குடும்ப நண்பர் மட்டுமின்றி எனது மனைவி நம்ரதாவுக்கு நல்ல தோழி ஆவார்.
அதனால் என்னிடம் இல்லையென்றாலும், அவரிடமாவது அதுபற்றி சொல்லியிருக்கலாம். ஆனால், அதுபற்றிய கருத்தினை பேஸ்புக்கில் வெளியிட்டு பிரச்னையை பெரிதாக்கி விட்டார். யாரோ முன்ன பின்ன தெரியாதவர் பற்றி சொல்வது போன்றே கருத்தை வெளியிட்டு விட்டார் என்று கூறியுள்ள மகேஷ்பாபு, அவர் செய்த செயல், என் இமேஜை பெண்கள் மத்தியில் கெடுக்க வேண்டும் என்பதற்காகவே செய்தது போலவே இருந்தது என்றும் கூறியுள்ளார்.