இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
மறைந்த பழம் பெரும் நடிகை அஞ்சலி தேவி தென்னிந்திய மொழிகளில் 350 படங்களுக்கு மேல் நடித்தவர். தமிழில் சிவாஜியை அறிமுகப்படுத்தியவரும் அவர்தான். சினிமாவை விட்டு விலகிய பிறகு சாய்பாபா வழியில் ஆன்மீக வாழ்க்கையிலும் ஈடுபட்டார். சினிமா நிறுவனம் துவங்கி நிறைய படங்களை தயாரித்தார். அவர் தற்போது நம்மிடையே இல்லை. அவர் தனது சுயசரிதையை எழுதியுள்ள தகவல் இப்போது வெளியாகி இருக்கிறது.
தெலுங்கு சினிமாவின் வசனகர்த்தாவும் பாடலாசிரியருமான ரவி கொண்டல்ராவ் அஞ்சலிதேவி தன் வாழ்க்கை கதையை சொல்ல சொல்ல அதனை எழுதியிருக்கிறார். பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போதே நடகத்தில் குழந்தை நட்சதிரமாக நடிக்க தொடங்கிய காலத்திலிருந்து சொந்த படம் எடுத்து சொத்தையெல்லாம் இழந்து பின்னர் சாய்பாபா அருளால் மீண்டு வந்தது வரை அதில் கூறியிருக்கிறாராம்.
இந்த சுயசரிதையை விரைவில் வெளியிட கொண்டல்ராவ் முயற்சி மேற்கொண்டு வருகிறார். சுயசரிதைக்கு டைட்டில் வைக்கும் உரிமையும், அதனை சரிபார்க்கும் உரிமையும் அஞ்சலிதேவியின் மகன்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆந்திர அரசு அதனை வெளியிட ஆர்வம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.