600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
சமீபகாலமாக பெரும்பாலான நடிகர்-நடிகைகள் பேஸ்புக், டுவிட்டர் கணக்கைத் தொடங்கி அதன்மூலம் தங்களைப்பற்றிய விசயங்களை ரசிகர்களுடன் ஷேர் பண்ணி வருகின்றனர். இதனால் ரசிகர்களின் கமெண்ட் மட்டுமின்றி தங்களை திரையில் எந்தெந்த மாதிரியெல்லாம் பார்க்க ஆசைப்படுகிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள முடியும் என்பதால், இப்போது விஜய்யும் சமூக வலைதள பகுதிக்குள் என்ட்ரி ஆகியிருக்கிறார்.
மேலும், முதல்நாளிலேயே ரசிகர்களுடன் சுமார் ஒரு மணி நேரம் வரை சாட்டிங்கில் ஈடுபட்ட விஜய், அவர்களது அனைத்துவிதமான கேள்விகளுக்கும் சரமாரியாக பதிலளித்திருக்கிறார். இப்படி தளபதியே தங்களது நேரடி தொடர்பில் வந்து விட்டதால் அவர்து ரசிகர் வட்டாரம் பெரும் உற்சாகத்தில் இருக்கிறது.
அதோடு, ரசிகர்களின் கேள்விகளுக்கு ஜாலியாக பதிலளித்த விஜய், அவர்களிடம் தனது சார்பில் ஒரு கோரிக்கையும் வைத்தாராம். அதாவது, சினிமாவை சினிமாவாக மட்டுமே பாருங்கள். யாரையும் எதிரியாக நினைக்க வேண்டாம். குறிப்பாக, அஜீத் ரசிகர்களுடன் மோதல் வேண்டாம். நண்பர்களாக பழகுங்கள். நீங்கள் அதை கைவிட்டால் நான் ரொம்ப சந்தோசப்படுவேன் என்று முதல்நாளிலேயே ரசிகர்களை கேட்டுக்கொண்டுள்ளார் விஜய்.
முதல் நாளே இப்படி தளபதி தங்களுக்கு அறிவுரை வழங்கியிருப்பதால், எதிர்காலத்தில், அவர் காட்டும் வழியில் நடக்க ரசிகர் மன்றங்கள் உறுதிமொழி எடுக்கப்போகிறார்களாம்.