ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரகாஷ்ராஜின் அபியும் நானும், சித்தார்த்-ஹன்சிகா நடித்த தீயா வேலை செய்யனும் குமாரு, விக்ரம்பிரபு நடித்த இவன் வேற மாதிரி உள்பட சில படங்களில் நடித்தவர் கணேஷ்வெங்கட்ராமன். தமிழ்நாட்டுக்காரரான இவர், பிறந்து வளர்ந்ததெல்லாமே மும்பையில்தான். இருப்பினும் வளர்ந்த மண் மீது கொண்ட பாசத்தினால் கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராவதே எனது லட்சியம் என்று சொல்லிக்கொண்டு நடித்து வருகிறார். அப்படி அவர் நடித்த படங்களில் அவரது கேரக்டர்கள் பேசும்படியாக அமைந்ததால், சில இயக்குனர்கள் அவரை ஹீரோவாக நடிக்க வைப்பதற்கும் கதை சொலலி வந்தனர். அதில் அச்சாரம் என்ற கதையை ஓ.கே செய்து ஹீரோவாகி விட்டார் கணேஷ் வெங்கட்ராமன்.
டைரக்டர் ராதாமோகனிடம் உதவியாளராக பணியாற்றிய மோகன் கிருஷ்ணா என்பவர் தான் இந்த படத்தை இயக்குகிறாராம். அபியும் நானும் படத்தில் த்ரிஷாவின் கணவராக கணேஷ் வெங்கட்ராமன் நடித்தபோதே அவரது நடிப்பாற்றலை அறிந்தவரான அவர், இப்போது எனது கதையில் கட்டாயம் நீங்கள்தான் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று நடிக்க வைத்துள்ளாராம்.
அதனால் மிகுந்த உற்சாகத்தில் ஹீரோ அரிதாரம் பூசியிருக்கிறார் கணேஷ். அவரிடத்தில், அப்படியென்றால் இனிமேல் கேரக்டர் ரோல்களில் நடிக்க மாட்டீர்களா? என்று கேட்டால், எல்லாவிதமான வேடங்களிலும் நடித்து மாறுபட்ட நடிகராக பெயரெடுக்க வேண்டும் என்றே ஆசைப்படுகிறேன். அதேசமயம் ஹீரோவாக வேண்டும் என்பதுதான் எனது லட்சியமாக இருந்தது. அதோடு நான் தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் நடித்தபோதே எனது நடிப்பைப்பார்த்த ஹன்சிகாவின் அம்மாவே, உங்களுககு இருக்கிற அழகுக்கும், திறமைக்கும் ஹீரோவாக நடிக்க எல்லா தகுதியும் இருக்கு என்று எனக்கு சான்றிதழ் கொடுத்தார். அதைக்கேட்டு அருகில் இருந்த ஹன்சிகாவும் அதை வழிமொழிந்தார்.
அதனால் எனக்குள் இருந்த ஹீரோ ஆசை இன்னும் அதிகரித்தது என்று சொல்லும் கணேஷ்வெங்கட்ராமன், நான் ஹீரோவாவதற்கு தகுதியானவன் என்று சொன்ன ஹன்சிகாவுடன் விரைவிலேயே டூயட் பாட வேண்டும் என்றும் இப்போது ஆசைப்படுகிறேன. அதற்கான முயற்சியும் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது என்கிறார்.