'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் |
விஜயகுமார்-மஞ்சுளா தம்பதியரின் வாரிசுகளில் வனிதாவும் ஒருவர். எப்போதும் பரபரப்புக்கு ஆளானவர். சில வருடங்களுக்கு முன்பு தொலைக்காட்சி நடிகர் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஸ்ரீஹரி என்ற ஒரு ஆன் மகன் பிறந்த நிலையில், ஆகாஷ் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் அவரை விட்டு பிரிந்தார். பின்னர், இரண்டாவதாக தொழிலதிபர் ஆனந்தராஜ் என்பவரை திருமணம் செய்துகொண்டு சில ஆண்டுகள் அமெரிக்காவில் வாழ்ந்தார். ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில் மகன் ஸ்ரீஹரி தன் அப்பாவுடன் தான் வாழ்வேன் என்று ஆரம்பித்த பிரச்னை பின்னர் விஜயகுமார் வீடு சென்று இவர்களது குடும்ப பிரச்னையாக பூதாகரமாக வெடித்தது, அதனால் ஆனந்த்ராஜையும், வனிதா பிரிந்தது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் தனக்கு சற்று ஆதரவாக இருந்த வனிதாவின் தாய் மஞ்சுளாவும் சமீபத்தில் இறந்து நிலையில், குடும்பங்களும், உறவுகளும் கைவிட்ட நிலையில் தனிமைக்கு தள்ளப்பட்டார். அப்போது தான் அவருக்கு ஒரியா மொழி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அந்த படத்தின் ஹீரோவாக நடித்தவர் தமிழ் சினிமாவின் பிரபல டான்ஸ் மாஸ்டர் ராபர்ட். படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெற்றது. கெஸ்ட் ரோலில் நடிக்க போன வனிதாவுக்கும், ராபர்ட்டுக்கும், நல்ல நட்பு ஏற்படவே ரெண்டு பெரும் மனம்
விட்டு பேசி உள்ளனர்.
பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக ஏற்கனவே மீடியாக்களில் செய்திகள் வந்த வண்ணம் இருந்தது. ஆனால் இருவரும் வெளிப்படையாக சொல்லவே இல்லை. இந்நிலையில் ''நேற்று என்னமோ ஏதோ'' இசை வெளியீட்டிற்கு ஜோடியாக வந்த இருவரையும், எல்லாரும் அதிரிச்சியாக பார்த்தனர். நம் பங்குக்கும் வனிதாவை என்ன வனிதா, எப்படி இருக்கீங்க, என்ன செய்றீங்க என்று கேட்ட போது, அவர் பேசியதை அப்படியே இங்கே தெரிவிக்கிறோம்.
நான் குடும்பத்தில் பல சிக்கல் நிலையில் இருந்தேன், குடும்ப வாழ்க்கை சரியாக அமையாமல் தவித்து போய் விட்டேன். அம்மா இறந்த பிறகு ரொம்பவே கலங்கி விட்டேன், என்ன பண்ண போறோம் என தெரியாமல் நின்றேன், யாரிடமும் போய் வாய்ப்பு கேட்டு நிற்க முடியவில்லை. குழப்பத்தில் இருந்தேன், அப்போது என்னை ஒரியா படம்
ஒன்றில் கெஸ்ட் ரோல் மற்றும் ஒரு பாட்டுக்கு டான்ஸ் பண்ண கூப்பிட்டார்கள். நானும் அமெரிக்கா சென்று நடித்தேன். அப்போது நடித்து கொண்டிருந்தவர் ராபர்ட், எனக்கு கொஞ்சம் பழக்கம் இருந்தது, ஒரு ஹலோ சொல்லிவிட்டு என் வேலையை பார்த்தேன். அவர் படத்தில் கொடுத்த உழைப்பு என்னோடு பழக வைத்தது, அவர் செலுத்திய அன்பு என்னை மறுமணம் செய்யும் அளவிற்கு கொண்டு போனது. ஷூட்டிங் கடைசி நாள் அன்று அங்கே இருக்கும் சர்ச் ஒன்றில் மோதிரம் மட்டும் மாத்திகொண்டு, இந்தியா வந்து விட்டோம். அவர் வீட்டினரோடு பேசி, சம்மதம் வாங்கி கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகப் போகிறது. ஒன்றாக தான் இருக்கிறோம், என் வீட்டில் கிடைத்த அன்பை இந்த குடும்பத்தில் பார்க்க முடிகிறது.
இப்போது என் மகள் 3வது படிக்கிறாள், என்னுடன் வைத்து நான் தான் பள்ளிக்கு அனுப்பி வைக்கிறேன். தற்போது வாழ்கையின் அர்த்தம் புரிகிறது. வி.ஆர்.டீம் என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கி உள்ளேன். இந்த மாதம் இறுதியில் தமிழ்ப்படம் ஒன்றை தயாரிக்க உள்ளேன். அதற்கான பணிகளில் தற்போது உள்ளேன். விரைவில் என் பலம் அனைத்தையும் கொடுத்து போனதை நினைக்காமல் இனி வர போவதை நினைத்து வாழக்கையின் வெற்றிக்காக மட்டும் உழைக்க போகிறேன். வீண் வாதங்கள், வருத்தங்கள் கலைந்து இந்த மாற்றமான வனிதாவை நீங்க விரைவில் பார்ப்பீங்க, கண்டிப்பாக உங்க சப்போர்ட் எனக்கு வேணும் என்று சொல்லி முடித்தார்.