டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
அட்டகத்தி படத்தில் தமிழுக்கு இறக்குமதியானவர் பெங்களூர் நடிகை நந்திதா. அதன்பிறகு எதிர்நீச்சல், இதற்குதானேஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்களில் நடித்தார். அப்படி அவர் நடித்து வெளியான அனைத்து படங்களுமே ஹிட் என்பதால், இப்போது நந்திதாவை ராசியான நாயகி பட்டியலில் சேர்த்துள்ளனர் கோலிவுட் இயக்குனர்கள். அதனால் புதிதாக சில படங்களை கைப்பற்றியிருக்கும் நந்திதா, கோடம்பாக்கத்தில் இன்னும் அழுத்தமாக கால்பதிக்கும் நோக்கத்துடன் நடித்துக்கொண்டிருக்கிறார்.
அவரிடத்தில், ஹீரோக்களுடன் அதிகமாக ஒட்டி உறவாடும் கதாநாயகி வேடங்களுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்கிறார்களே? என்று கேட்டதற்கு, அந்த மாதிரி வேடங்கள் எனக்கு வரவிலலை என்றுதான் சொல்ல வேண்டும். அதற்கு காரணம், நான் ஒரு நடிகையாக இல்லாமல் பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண்ணைப்போன்றே இருப்பதால் என்னை அந்த மாதிரி ஒட்டி உறவாடி நடிக்க வைக்க டைரக்டர்கள் நினைக்கவில்லையோ என்னவோ. மேலும், அட்டகத்தியில் தினேசுடன் அறிமுகமான நான், அதன்பிறகு சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல் அதற்கடுத்து விஜயசேதுபதியுடன் இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படங்களில் நடித்தேன். அனைத்துமே எனது தோற்றத்துக்கு மிகப்பொருததமான வேடங்களாகத்தான் நடித்திருந்தேன்.
அவற்றில் இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் எனது கதாபாத்திரம் எனக்காகவே அளவெடுத்து தைத்த டிரஸ் போன்ற கனகச்சிதமாக அமைந்திருந்தது. குடிசை மாற்று வாரியம் கட்டிடத்தில் வசிக்கும் பெண்ணாக நான் நடித்தது நிஜமாலுமே அந்த ஏரியா பெண்ணை பார்த்தது போன்றே இருந்ததாக சில இயக்குனர்களே சொன்னார்கள். அதேபோல் விஜயசேதுபதியும் எனது நடிப்பு யதார்த்தமாக இருந்ததாக சுட்டிக்காட்டினார்.
என்னைப்பொறுத்தவரை ஹீரோயினியாக விதவிதமான காஸ்டியூம் அணிந்து டூயட் பாட வேண்டும் என்ற ஆசையெல்லாம் கிடையாது. அதிலிருந்து மாறுபட்டு வித்தியாசமான கதாபாத்திரங்களாக கிடைத்தாலே போதுமென்று நினைக்கிறேன் என்று சொல்லும நந்திதா, இந்த விசயத்தில் எனக்கும், விஜயசேதுபதிக்கும் ஒரே மாதிரியான சிந்தனைதான். அவரும் ஹீரோயிசம் என்பதில் இருந்து விடுபட்டு, அந்த கேரக்டராகவே வெளிப்பட விரும்புகிறார். அதேபோல் நானும் யதார்த்தமான நாயகியாக நடிக்கவே விரும்புகிறேன். அதாவது ஒரு படத்தில் இரண்டு கதாநாயகி என்று சொல்லி, அதில் ஹீரோவுடன் நடிக்கும் வேடம் வேண்டுமா? இல்லை கதையோடு கலந்த நாயகி வேடம் வேண்டுமா? என்று கேட்டால், கதையோடு கலந்த வேடத்துக்குத்தான் நான் முதலிடம கொடுப்பேன் என்கிறார் நந்திதா.