'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
அமலாபாலுக்கு சில இந்திப் பட வாய்ப்புகள் வந்தது. அதை அவர் மறுத்துவிட்டார். இங்கு அவருக்கு நெருக்கமான டைரக்டர் இந்திப் படங்களில் நடிக்க வேண்டாம் என்று தடுத்து விட்டதாக சொன்னார்கள். இப்போது அதற்கான காரணத்தை அமலா பால் சொல்லியிருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது:
கால்ஷீட் பிரச்னை காரணமாகத்தான் இந்திப் படங்கள்ல நடிக்கவில்லை. இப்பவும் கையில் நாலு படம் இருக்கு. அதோட இந்திப்படத்துல நடிக்கிறோம்னு சும்மா பெருமைக்காக மட்டும் நடிக்க முடியாது. நல்ல கதை இருக்கணும், அதுல என்னோட கேரக்டர் பலமா இருக்கணும். அப்படி ஒரு வாய்ப்பு வந்தா நிச்சயம் நடிப்பேன். தென்னிந்தியாவிலேயே இன்னும் நிறைய சாதிக்க வேண்டியதிருக்கு. இங்கு எனக்கு பெரிய இடம் இருக்கு. அப்புறம் ஏன் இந்திக்கு போகணும்.
நிமிர்ந்து நில் ரிலீசாகும்போது எனக்கு ஒரு தனி இடம் கிடைக்கும். தனுசுடன் 3 படங்கள் நடிக்க வேண்டியது மிஸ் ஆகிடுச்சு இப்போ வேலையில்லா பட்டதாரியில அதுவும் செட் ஆகிடுச்சு. முதல்ல இங்க சாதிப்போம். அப்புறம் இந்திப் பக்கம் போகலாம் என்கிறார்.